விழுப்புரம்,நவ.26- விழுப்புரம் அருகே மலட்டாற்றில் வெள்ளம் காரணமாக தரைப்பாலம் மூழ்கிய தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே பில்லூர் - சேர்ந்தனூர் இடையே உள்ளது மலட்டாறு தரைப்பாலம். தற்போது பெய்து வரும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால், போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த 13 ஆம் தேதி முதல் வாகனங்கள் செல்ல முற்றிலுமாக தடை செய்து தடுப்பு கள் அமைத்தனர். இந்த நிலையில், விழுப்புரத்திலிருந்து பானாம்பட்டு, வாணியம்பாளையம் வழி யாக சுமார் 10 கி.மீ தூரம் பொதுமக்கள் சுற்றி சென்று கொண்டிருந்தனர். சனிக்கிழமை(நவ.25) சிவகுரு என்பவர் பழு தான முந்திரி கொட்டை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை சரி செய்வதற்கு பண்ருட்டி யில் இருந்து ‘டாட்டா ஏஸ்’ வாகனம் மூலம் சேந்தனூர் வழியாக விழுப்புரத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தடுப்புகள் இருந்ததை கவனிக்காமல் பில்லூர் தரை பாலத்தை கடக்க முயன்ற போது அதிகமாக தண்ணீர் அதிகரித்ததால் வாகனம் நீரில் அடித்து சென்றது. இதில் ஓட்டுநர் சிவகுரு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். பாலத்தின் ஒரு முனையில் போக்கு வரத்து தடுப்பு கட்டைகள் இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், தினந்தோறும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஏராளமானோர் இந்த சாலையை கடக்க முற்பட்ட போது விபத்தில் சிக்கிக் கொள்வது வாடிக்கை யாக உள்ளது. எனவே, இந்த சாலையில் முழுமையாக போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.