பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்த சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை விசிக சார்பில் நகர செயலாளர் டாக்டர் எம். எஸ்.முருகன் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர், இதில் கள்ளக்குறிச்சி கடலூர் மண்டல செயலாளர் ராஜ்குமார் பதிவு செய்தார். நிகழ்வில் ஒன்றிய பொருளாளர் க.கார்முகிலன் மாவட்ட அமைப்பாளர் திருமுருகன் நகர பொருளாளர் க. குமார் நகர துணை செயலாளர்கள் பொன். இளையராஜா பாலாஜி. கிளியூர் கரிகால சோழன் ராஜா, வெங்கடேசன், ரவி, சுப்ரமணி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.