ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை வடக்கு கிளையின் சார்பில் திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடைபெற்றது. பிரச்சார இயக்கத்தை 4 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் துவக்கி வைத்தார். இதில் செயலாளர் இ.சந்திரசேகர், தண்டையார்பேட்டை கோட்டத் தலைவர் திருநீர் செல்வம், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, வெங்கட்டைய்யா, மதன் கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.