ராணிப்பேட்டை, டிச. 18 – ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த ஏலத்தூர் கிராமத்தில் பல ஆண்டு களாக சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாத தால் இடுப்பளவு தண்ணீரில் மூதாட்டியின் உடலை சுமந்து சென்று உறவினர்கள் அடக்கம் செய்தனர். நெமிலி அடுத்த ஏலத்தூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிக்கு பல ஆண்டுகளாக சுடுகாடு பாதை இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் செவ்வாயன்று (டிச. 17) அப்பகுதியை சேர்ந்த சின்னமாள் (65) என்பவர் உடல் நலக் குறைவு காரண மாக உயிரிழந்தார். அவரது உடலை உற வினர்கள் வேறு வழியின்றி இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து எடுத்து சென்று அடக்கம் செய்தனர். பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை தங்கள் ஊருக்கு சுடுகாடு பாதை அமைத்து தரவில்லை. ஆகவே உடனடியாக பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.