ராணிப்பேட்டை, ஜூலை 28 -
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க அமைப்பு பேரவை கூட்டம் வெள்ளியன்று (ஜூலை 28) பி. மணி தலைமையில் காவேரிப்பாக்கத்தில் நடை பெற்றது.
ஆட்டோ சங்க மாநில இணைச் செய லாளர் டி. முரளி துவக்க உரையாற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர். வெங்க டேசன், மாவட்டச் செயலாளர் ஆ. தவராஜ், பொருளாளர் என். ரமேஷ், மாவட்டத் துணைத் தலைவர் என். காசி நாதன், ராமு, கே.கே.வடிவேலு ஆகியோர் உரையாற்றினர். மாநில துணைத் தலைவர் எ. கிருஷ்ணமூர்த்தி நிறைவு உரையாற்றி னார். நெமிலி ஏ. சம்பத் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ. 20,000 மானியம் வழங்க வேண்டும், விபத்து கால பணப்பயன் இன்சூரன்ஸ் தொகை ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். எஃப்.சி இன் போது இடைத்தரகர்களை கைவிட்டு நேரடியாக குறைந்த கட்டணத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஆட்டோ தொழிலாளர்களுக்கு விரோதமான ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலவாரிய பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு நல வாரிய பதிவுகளை தாமதிக்காமல் செய்துதர வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றபட்டன.
புதிய நிர்வாகிகள்
மாவட்ட கவுரவத் தலைவராக ஆர். வெங்கடேசன், தலைவராக பி. மணி, செயலாளராக கே.கே. வி. பாபு, பொருளாளர் கே. ரமேஷ் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.