திருப்பத்தூர், ஆக. 16-
ஏலகிரி மலையில் வசிக்கும் பூர்வீக குடி மக்களின் நிலங்களை பறிக்கும் முயற்சிக்கு துணைபோகும் திருப்பத்தூர் வட்டாட்சி யரை கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை முத்தனூர் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 40 குடும்பங்களை சேர்ந்த இந்து மலையாளி பழங்குடி மக்கள் வசித்து வரு கின்றனர். அந்த இடத்தில் குடிசை அமைத்து, விவசாயம் செய்து, வாழ்வாதாரத்திற்காக பிற தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தனிநபர் ஒருவர். அந்த மக்கள் வசிக்கும் மொத்த இடமும் தனக்கு சொந்தமென்று 1977 ஆம் ஆண்டு வாங்கிய தாக போலியான பட்டா உருவாக்கி அப கரிக்க முயற்சிக்கிறார்.
பழங்குடி மக்களின் அனுபவ நிலங்களை அபகரிக்க முயற்சிக்கும் நில மோசடியாளர் களுக்கு துணை போகும் வகையில், திருப் பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் தீயணைப்பு வாகனம் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசாருடன் பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தில் நுழைந்து நிலத்தை அள வீடு செய்ய வேண்டும் என்று மிரட்டி யுள்ளார்.
பழங்குடி மக்களை அச்சுறுத்தி மாஃபியா கும்பல்கள் களுக்கு துணை போகும் வட்டா ட்சியர் சிவப்பிரகாசத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏலகிரி மலை செயலாளர் ஜி.பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு, மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்மு கம், ஜவ்வாது மலை கமிட்டி செயலாளர் எல். ஜெயராமன், சிபிஎம் திருப்பத்தூர் தாலுகா செயலாளர் காசி ஆகியோர் உரை யாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து பி.டில்லி பாபு கோரிக்கை மனு கொடுத்தனர்.