districts

img

தொண்டு நிறுவனம் என்ற பெயரில் கோவில் நிலத்தை அபகரிக்க முயற்சி

சென்னை, பிப்.17 - அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலத்தை தொண்டு நிறுவனம் என்ற பெயரில் சங்பரிவார கும்பல் அபகரிக்க முயற்சிக்கிறது. இதனை தடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை சைதாப்பேட்டையில், மருத்துவமனை  (தற்போது விஜிபி) சாலை, எண்.6ல் ஸ்ரீஆஞ்சநேயர் (எ) அனுமந்தராயர் கோவில் உள்ளது. கோவில் அமைந்துள்ள நிலம், 1861ஆம் ஆண்டில் அப்போதைய பிரிட்டிஷ் கவர்னர், சென்னை இனாம் கமிஷனர் மூலமாக கோவிலுக்கு இனாமாக வழங்கப்பட்டது. சுமார் 1.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவில் நிலத்தை பரம்பரை தர்மகர்த்தாக்கள் பராமரித்து வந்தனர். 2007ஆம் ஆண்டு தர்மகர்த்தாக்க ளின் வாரிசுகள் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தனர். அதனை அறநிலையத்துறை நிராகரித்துவிட்டு, கோவில் மற்றும் கோவிலுக்கு சொந்த மான நிலத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. இந்த நிலையில், கோவிலின் பின்புறம் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தில் மரம் நட்டு பராமரிக்க ‘கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டம்’ என்ற பெயரில்  ‘யதா கிரீன் கவுன்சில் ஆப் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்திற்கு 2022ல் இந்து அறநிலைத்துறையின் அனுமதி அளித்துள்ளது. இதன்படி 1.18 ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியில் மட்டும் மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளது. அடையாற்றையொட்டி உள்ள நிலத்தை காலியாக வைத்துள்ளனர். ‘கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டம்’ என்று பெயர் பலகையில் சிறியதாக வைத்து விட்டு, ‘ஸ்ரீனிவாச வனம்’ என பெரியதாக பெயரை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஞ்சநேயர் கோவில் நிலம் காலியாக இருந்தபோது சங்பரி வார் கும்பல்கள் ஷாகா நடத்திக் கொண்டிருந்தது. அரசியல் மற்றும் சமூக நல அமைப்புகளின் தலை யீட்டால் பின்னாளில் அவை நிறுத்தப்பட்டன. தற்போது சுற்றுச் சழல் மற்றும் மரக்கன்று நடும் திட்டம் என்ற பெயரில் கோவில் நிலத்தை ஆக்கிர மிக்க முயற்சிப்பதாக அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் புகார் தெரி விக்கின்றனர். யதா கிரீன்  கவுன்சில் ஆப் இந்தியா என்ற நிறுவனம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கப்படும் என்று அறநிலையத்துறை ஆணையில் குறிப்பிட்டிருந்தாலும்,  அதற்கு நேர்மாறாக  சங்பரிவார அமைப்பினர் கட்டுப்பாட்டில் தற்போது அந்த இடம் உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.   நிலத்தில் ரூ.70 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் யதா கிரீன்  கவுன்சில் ஆப் இந்தியா என்ற நிறு வனம் மரக்கன்றுகளை நட்டு பரா மரிக்கப்படும் என்று அறநிலையத் துறை ஆணையில் குறிப்பிட்டுள்ளது. அந்த தொகையை செலவிட்டது போல் தெரியவில்லை. இதற்காக தனியாக மின்சாரம், நீர் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யாமல், கோவிலுக்கு சொந்தமான ஆழ்துளை குழாய் நீரை பயன்படுத்துவதோடு, அதற்கான மின்சார செலவைக்கூட மற்றவர்கள் செலுத்துவதாக தெரிகிறது.  இதையெல்லாம் அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே, கோவில் நிலத்தை கைப்பற்றுவதற்காக என்ஜிஓ என்ற பெயரை பயன்படுத்தி சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தினசரி காலை, மாலை நேரங்களில் மரம் நடப்பட்டுள்ள இடத்திற்கு வந்து செல்கின்றனர். இவற்றிற்கு மேலாக, மரம் நட்டு வைக்கப்பட்டுள்ள வைணவக் கோவில் நிலத்தில், லிங்கத்தை வைத்து வழிபட தொடங்கி யுள்ளனர். எனவே, சமூக அமைதியை கெடுவதற்கு முன்பாக தமிழக அரசு இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.