சென்னை, பிப். 7- சென்னை விமான நிலைய சுங்க துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், துபாயிலிருந்து வந்த பயணி களை சோதனை செய்தனர். அப்போது பெண் பயணி ஒருவர் 971 கிராம் தங்கத்தை பசை வடிவில் உள்ளாடையில் தைத்து மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் துறையினர் பெண் பயணியை கைது செய்தனர். அதேபோல் கொழும்பிலிருந்து சென்னை வந்த பயணிகளை சோதனை செய்த போது, ஆண் பயணி ஒருவர் 123 கிராம் தங்கத்தை பசை வடிவில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 47.73 லட்ச ரூபாய் என்று கூறப்படுகிறது.