districts

img

தமுஎகச பொன்விழா கருத்தரங்கில் மாணவர்களுக்கு பாராட்டு

ராணிப்பேட்டை, ஆக.11- ராணிப்பேட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா கருத்தரங்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்றது.  இதில் கிளைச் செயலாளர் க.கோபால்ராஜ் வரவேற்றார். மாநிலச் செயலாளர், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் ஏகாதசி கருத்துரையாற்றினார். இந்த நிகழ்வில், தமிழ் வழியில் 10, 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செ. சரவணன், தமுஎகச மாவட்டத் தலைவர் சீ. பால சுப்பிரமணி, பொருளாளர் த. மணிகண்டன் உள்ளிட்டோர் உரையாற்றினர். அந்திக் காற்று பாலு சுதந்திர தின பாடல் பாடினார். ஆர். புவனேஸ்வரி நன்றி கூறினார்.