செங்கல்பட்டு, ஏப்.28- உயர்கல்வி பயில செல்லும் மாணவர்க ளுக்கு வழிகாட்டுதல் பயிற்சி பார்வேர்டு மகளிர் அமைப்பு சார்பில் நடைபெற்றது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திரு வள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்க ளில் பார்வேர்டு மகளிர் அமைப்பு கடந்த 33 ஆண்டுகளாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு தரமான இரவு பாட சாலைகளை நடத்தி வருகின்றனர். இந்த இரவு பாட சாலையில் பயின்று உயர் வகுப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு தாம்பரம் சிஎஸ்ஐ ஆலய வளாகத்தில் வருடாந்திர வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் முனைவர் மோசஸ் மனோகர் கலந்து கொண்டு மாணவர்க ளுக்கு தலைமைத்துவம், நேர மேலாண்மை, திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்துரை வழங்கி னார். பயிற்சியில் கலந்து கொண்ட மாண வர்களுக்கு பார்வேர்டு மகளிர் அமைப்பின் இயக்குநர் டாக்டர் சியாமளா பேபி பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.