districts

img

புதுச்சேரியில் முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு

புதுச்சேரி, ஆக. 26- அரசின் வேண்டுகோளை ஏற்று முற்றுகைப் போராட்டத்தை ஒத்தி வைத்திருப்பதாக புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.   இதுகுறித்து புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலாளர் ஆர்.ராதா கிருஷ்ணன், மாநில அங்கன்வாடி ஊழி யர்கள் சங்கத் தலைவர் ராஜலட்சுமி, செயலாளர் தமிழரசி, ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- புதுச்சேரி மாநிலத்தில் அங்கன் வாடி ஊழியர்களுக்கு, மாத இறுதியில் ஊதியம் வழங்கவேண்டும். ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும், நிலுவையில் உள்ள போனஸ் மற்றும் பஞ்சப்படி போன்றவற்றை காலத்தோடு வழங்க வேண்டும்.  6வது  ஊதியக்குழு பரிந்துரைப்படி அங்கன்வாடி ஊழியர் களுக்கு 50 விழுக்காடு நிலுவை ஊதி யம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை முடக்கும் வகையில் அரசு செயல்படுவதை திரும்ப பெற வேண்டும்.3 ஆண்டுகள் பணி முடித்த ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தொடர்ச்சியாக போராடி வருகிறோம். இந்நிலையில் முதல்வர் ரங்க சாமி தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், ஒப்புக் கொண்டபடி கோரிக்கைகளை பரிசீலனை செய்வ தாக அரசு செயலாளர், துறை அதி காரிகள் கூறியிருந்தனர்.  எனவே, அரசு அதிகாரிகளின் விருப்பப்படி கோரிக்கைகளை நிறைவேற்ற 15 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கோரியிருந்த நிலையில், ஆக.27 அன்று  புதுச்சேரி சட்டமன்றம், காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற இருந்த முற்றுகை யிடும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம். இவ்வாறு தெரிவித்தனர். இச்சந்திப்பின் போது நிர்வாகிகள் செல்வராணி, சத்தியா,லலிதா ஆகியோர் உடனிருந்தனர்.