விழுப்புரத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டி கிடக்கும் சமுதாய நலக்கூடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டியில் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் தங்களது வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வசதியாக ஒவ்வொரு ஊராட்சி பகுதிகளிலும் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இதன் மூலம் பெரும்பாலான ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வந்தனர். அதன் ஒருபகுதியாக கோவிந்தசாமி லே-அவுட் பகுதியில் கடந்த 2009-2010ஆம் நிதி யாண்டில் விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் செலவில் சமுதாய நலக் கூடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் திறக்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே மக்களுக்கு பயன்பட்டது. இதை ஆரம்ப காலத்தில் வழுதரெட்டி ஊராட்சியினர் பராமரித்து வந்தனர். அதன் பிறகு வழுதரெட்டி விழுப்புரம் நகராட்சி யுடன் இணைக்கப்பட்டது. அதன்பிறகு சமுதாய நலக்கூடத்தை நக ராட்சி நிர்வாகத்தினர் முறையாக பராமரிக்க வில்லை. இதனால் இந்த சமுதாய நலக்கூடம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி மிகவும் பழு தடைந்த நிலையில் உள்ளது. மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர் கூறுகையில், “ஏழை குடும்பங்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்தி கொள்வதற்கு ஏதுவாக சமுதாய நலக்கூடங்கள் கட்டப்பட்டது. ஆனால் முறையாக பராமரிப்பு செய்யவில்லை. இதனால் பயன்பாடு குறைந்து தனியார் மண்டபங்களில் பணம் செலுத்தி நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, சமுதாய நலக் கூடத்தை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். பாவாடை பொன்னுசாமி