வேலூர், அக் 27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆம்பூர் தாலுகா 3வது மாநாடு ஐய்யனூரில் நடை பெற்றது. செங்கொடியை மூத்த உறுப்பினர் சி.பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை ஆர்.ராஜ்குமார் முன்மொழிந்தார். சி.முத்து அனைவரையும் வரவேற்றார். மாநாட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.ஏகலைவன் துவக்கி வைத்தார் செயலாளர் அறிக்கையை ஆர்.மணிமாறன் வரவு செலவு அறிக்கையை எஸ்.இளங்கோவன் முன் வைத்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் வ.அருள்சீனிவாசன் வாழ்த்தி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.காத்தவராயன் நிறைவுரையாற்றினார். 7 பேர் கொண்ட தாலுகாக்குழு செயலாளராக ஆர்.மணிமாறன், தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டில் ஆம்பூர் நகராட்சியின் 36 வார்டுகளிலும் குப்பைகளை அகற்ற மற்றும் கழிவு நீர் கால்வாய்களை தூர்வார போதிய அளவிலான துப்புரவு பணியாளர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும். ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கையினால் வெளிநாடுகளில் இருந்து ஆர்டர் இல்லாததால் தோல் மற்றும் தோல் உப பொருட்கள் தயாரிப்பு முற்றிலும் குறைந்து போய் உள்ளது. இதனால் பல்வேறு தொழிற்சாலைகள் தங்களது தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். அவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு அனைத்து பணப்பலன்களையும் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும். ஆலங்காயம் முதல் வெள்ளக் குட்டை, காட்டுக்கொல்லை வழியாக வேலூர் சென்னைக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கிட வேண்டும். காட்டுக்கொல்லை முதல் கென்னடிகுப்பம் வரை இரு வழிச்சாலை அமைத்திட வேண்டும். அனைத்து விவசாய பயிர்களுக்கும் ஒரே மாதிரியான கூட்டுறவு வங்கி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.