districts

img

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் பன் திறன் ஊழியர்

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் பன் திறன் ஊழியர் சங்கத்தின் முன்னாள் அகில இந்திய உதவி பொதுச் செயலாளரும், மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளன மாவட்ட செயலாளருமான ஏ.பெருமாள் பணிநிறைவு பாராட்டு விழா முன்னாள் கோட்ட தலைவர் பி.திருமகன் தலைமையில் வேலூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  கோட்ட தலைவர் எஸ்.கணேசன்,  செயலாளர் டி.ராஜகுமார், மாநில செயலாளர் ஜி.கண்ணன், அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பி.மோகன், அஞ்சல் ஆர்எம்எஸ்  மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கம் டி.சிவகுருநாதன், ஜேசிஎம் உறுப்பினர் எஸ்.கருணாநிதி, தவிச முன்னாள் மாநில செயலாளர் எஸ்.தயாநிதி, மாநகர தொழிற்சங்க கூட்டமைப்பு கன்வீனர் சி.ஞானசேகரன் வாழ்த்திப் பேசினர். நிறைவில் ஏ.பெருமாள் ஏற்புரையாற்றினார். கோட்ட பொருளாளர் சி.கேசவன் நன்றி கூறினார்.