கிருஷ்ணகிரி, ஏப். 10- கர்நாடகாவில் பாஜகவை மறைமுக மாக இபிஎஸ் ஆதரிக்கிறார். கர்நாடகா வில் நிறைய பகுதிகளில் தமிழர்கள் வாக்குவங்கி உள்ளது. தமிழர்களின் வாக்கு வங்கியை சிதைப்பதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவளிக்க இப்படி ஒரு நிலையை எடுத்துள்ளார் என்று கருதுகிறேன் என்று கூறி கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக எஸ்.டி.குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் வரை தொடர்ந்து தமிழர்களுக்கு அரணாக போட்டியிட்டு வருகிறது. ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தல், இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. ஏன், யாருக்கு ஆதரவளிப்பது என்ற குழப்பமான மனநிலையில் கர்நாடக அதிமுகவினர் உள்ளனர். இபிஎஸ் முதன்முதலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி ஏ படிவம், பி படிவத்தில் கையெழுத் திட்டார் என்றால் அது கர்நாடக சட்ட மன்ற தேர்தலில்தான். ஆனால், சில நாட்களிலேயே பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி கடைசி நேரத்தில் எங்களை வாபஸ் பெறவைத் தார்கள். கட்சிக்காக தீவிரமாக உழைத்த நாங்கள் இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனுவை கர்நாடக மாநில அதிமுக செயலாளர் என்ற அடிப்படையில் அளித்திருந்தேன். அதற்கு நேர்காண லும் நடத்தினார்கள். மறுநாள் என்னை தலைமை கழகத்துக்கு வர சொன்னார் இபிஎஸ். அதன்படி சென்றால் என்னை சந்திக்கவும் இல்லை, தமிழ்நாடு மற்றும் புதுச் சேரிக்கு மட்டும் வேட்பாளரை அறிவித்துவிட்டு சென்றுவிட்டார். கர்நாடக மாநிலத்துக்கு ஏன் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை அதிர்ச்சி யடைய வைத்தது. கட்சி நிர்வாகிகள் சொன்னதால் கர்நாடகாவில் வேட்பாளரை நிறுத்தவில்லை என்றார். கட்சியின் பொதுச்செயலாளர் நீங்கள்தான். அந்த அடிப்படையில் முடி வெடுக்க வேண்டியதும் நீங்கள்தான். ஆனால் மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக போட்டியிட வேண்டாம் என்று சொன்னால் எப்படி என்று மட்டும் இபிஎஸ்ஸை கேட்டுவிட்டு, தெளிவான முடிவு இல்லாததால் என்னை பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.
அதன்பின், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி இபிஎஸ்ஸை சந்திக்கச் சென் றோம். ஆனால், ‘உங்களை எல்லாம் யார் வரச்சொன்னது’ என்கிற ரீதியில் கட்சி நிர்வாகிகள் கீழ்த்தரமாக நடத்தினார்கள். நிர்வாகிகள் சத்தம் போட்ட பிறகு இபிஎஸ் எங்களைச் சந்தித்தார். அப்போது கர்நாடகாவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. அங்கு போட்டியிட்டால் ஓட்டு வாங்க மாட்டோம் என்று கூறிய இபிஎஸ், ‘யாருக்கு ஆதரவளிப்பது என்பதை குழுவில் பேசி பிறகு சொல்கிறேன் என்று தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. நாங்கள் யாருக்கு வேலை செய்ய வேண்டும் என்பதை ஒரு பொதுச் செயலாளராக தீர்மானிக்க முடியாத நிலையில் இபிஎஸ் உள்ளார். மேலும் தில்லியை பற்றியோ, மோடியை பற்றியோ இதுவரை அவர் வாய் திறக்கவில்லை. வேலியே பயிரை மேய்ந்த கதை யாக கட்சித் தலைமையே கர்நாடக மாநிலத்தில் கட்சியை அழிக்கிறது. இப்படியான நிலையில் மாநிலச் செயலாளராக இருந்து என்ன பயன். கட்சித் தொண்டர்களுக்கு ஒரு மாநிலச் செயலாளராக என்னால் பதில் சொல்ல முடியவில்லை. வேறு வழியில்லாமல், கட்சியில் இருந்து விலகாமல், எனக்கு கொடுக்கப்பட்ட கர்நாடக மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். கர்நாடகாவில் பாஜகவை மறை முகமாக இபிஎஸ் ஆதரிக்கிறார். கர்நாடகாவில் நிறைய பகுதிகளில் தமிழர்கள் வாக்கு வங்கி உள்ளது. தமிழர்களின் வாக்கு வங்கியை சிதைப் பதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவளிக்க இப்படி ஒரு நிலையை எடுத்துள்ளார் என்று கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.