சென்னை, ஆக. 17-
செங்குன்றம் மொண்டியம்மன் நகர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (53). இவர் பாடியநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவர் பாடியநல்லூரில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் திடலில் பார்த்தி பன் தினசரி நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் வியாழக்கிழமை காலை அவர் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை சுற்றி வளைத்து சரமாரி யாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் காவல் துறையினர் பார்த்திபன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது பல்வேற்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாக வும், செம்மரக் கடத்தல் வழக்கில் ஆந்திர காவல் துறை யினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.