districts

சென்னை முக்கிய செய்திகள்

ஆதிதிராவிடர் நலவிடுதிகளில் மாணவர் சேர்க்கை

கள்ளக்குறிச்சி, ஜூலை 7- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் ஆதி திராவிடர் நல விடுதிகளில் மாணவ மற்றும் மாணவியர் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மாவட்டத்தில்  உள்ள 27 பள்ளிமாணவர் விடுதிகளும் 1 தொழிற்பயிற்சி மாண வர் விடுதியும் 11  பள்ளி மாணவியர் விடுதிகளும்  1 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி என மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் தங்கி பயில விருப்பமுள்ள அனைத்து மாணவ மாணவி யர்களுக்கும் உணவும் உறைவிடமும் 4 இணை சீருடைகளும் இலவசமாக வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மற்றும் மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டி புத்த கங்கள் வழங்கப்படும். இவ்விடுதிகளில் சேர்வ தற்கு மாணவ மற்றும் மாண வியர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 6-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ மற்றும் மாணவி யர்கள் விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். மாணவர்களது இருப்பிடத்தி லிருந்து பள்ளிக்கு இடை வெளி 5 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மேலும் இவ்விதியானது மாணவியர்களுக்கு பொருந்தாது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர் மிக வும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த பள்ளி மாணவ மற்றும் மாணவி யர்கள் விடுதியில் சேர்ந்து படித்து பயன்பெறுமாறு ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

பள்ளி ஆசிரியையிடம் தாலியை அறுத்த 2 பேர்  கைது

சிதம்பரம், ஜூலை 7- சிதம்பரம் தேரடி தெருவில் வசிக்கும் ரம்யாதேவி (42) இவர் சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார்.  இவர் பள்ளி அதே பகுதியில் உள்ள   பேருந்து நிறுத்தம் அருகே மாணவர்களுடன் பேருந்துக் காக நின்று கொண்டிருந்தார்.   அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில்  வந்த 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆசி ரியை கழுத்தில் இருந்த 9 பவுன் தாலி செயினை அறுத்து சென்றனர். இது குறித்து அண்ணாமலை நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடும் பணியில்  தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.  தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டதில் தாலி ஜெயினை அறுத்துச் சென்றது திருவாரூர் மாவட்டம்  நீடாமங்கலம் கொரடாச் சேரி பகுதியைச் சேர்ந்த கோகுலேஷ்( 22 ) மற்றும் நிதீஷ் குமார்(23)  என்பது தெரிய வந்தது. பின்னர் 2 பேரை யும் கைது செய்துள்ளனர்.

பாமக பிரமுகர் மீது தாக்குதல் நடத்திய 5 பேர் கைது

கடலூர், ஜூலை 7- கடலூர்  பகுதியில் கொலை, கொள்ளை  குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்தவர் சங்கர்(43) இவர் வன்னியர் சங்க முன்னாள் நகர தலைவ ரான இருந்த நிலையில் பா.ம.க. பிரமுக ராக உள்ளார். சனிக்கிழமை மாலை சங்கர் வீட்டின் இருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து நேரத்தில் சங்கரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிவிட்டனர்.  படுகாயமடைந்த சங்கரை மீட்டு சிகிச் சைக்காக கடலூர் அரசு மருத்துவ மனை யில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சை க்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  சிசிடிவி காட்சிகளில் வெட்டிவிட்டு தப்பி யவர்களின் வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது இதனை வைத்து திருப்பா திரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் 4  தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடு தல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சதீஷ், முகிலன், ராஜ்கிரண், கவுஷிக், வெங்கடே சன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்த னர். இதில் திருவந்திபுரம் அருகே கைது செய்ய முற்பட்டபோது சௌசிக், சதீஷ் மற்றும் வெங்கடேசன் போலீசார் பிடியிலி ருந்து தப்பி ஓடிய போது 3 பேரும் கீழே விழுந்து கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசார ணையில் முன்விரோதம் காரணமாக சங்க ரின் தம்பி பிரபுவை (வயது 35) சதீஷ் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து கடந்த 28.2.2021 அன்று தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். இந்த வழக்கில் சங்கர் முக்கிய சாட்சி யாக இருப்பதாலும், வழக்கை முன்னின்று  நடத்துவதாலும் அவர் மீது விரோதம் கொண்ட சதீஷ், வெங்கடேசன் உள்ளிட் டோர் சங்கரை  கொலை செய்ய முயன்ற தாக பிடிபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியர்களுக்கு மானியம் வழங்க  துணைநிலை ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரி, ஜூலை 7 - புதுச்சேரி அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுககு மானியம் வழங்க துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பு செயலாளர் வெர்பினா ஜெய ராஜ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி யிருப்பதாவது:  புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் இயங்கி வரும் 35 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ. 21 கோடியே 16 லட்சத்து 52 ஆயிரத்து 500 மானியம் வழங்க துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.  இந்த நிதி, பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த மார்ச் முதல் ஜூன் வரையிலான 4 மாத சம்பளம், ஓய்வூதியம், ஓய்வூதிய பலன்கள் வழங்க செலவு செய்யப்படும். நிர்வாகங்களுக்கு தேவைப்படும் 100 விழுக்காடு நிதியில்  ஊதியத்திற்கான 95 விழுக்காடு நிதி அரசால் ஏற்கப்படும். மீதி 5 விழுக்காடு நிதி நிர்வாகத்தால் ஏற்கப்படும். பள்ளிக்கல்வி விதிகள் 1996 இல் திருத்தம் செய்யப்படும் வரை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 95 விழுக்காடு மானியத்தை நேரடியாக செலுத்தும் முறை தொடரும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில்  செவிலியர்  பணிக்கு எழுத்து தேர்வு

புதுச்சேரி, ஜூலை 7-  இபிஎப்ஓ நேர்முக உதவியாளர்,செவிலியர் பணிக்கு எழுத்து தேர்வு புதுச்சேரியில்  நடைபெற்றது. ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், 2024ம் ஆண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎப்ஓ) உள்ள நேர்முக உதவியாளர் பதவி மற்றும் ஈஎஸ்ஐசி செவிலியர் அதிகாரி பதவிகளுக்கான போட்டி தேர்வு நடைபெறும் மையங்களில் ஒன்றாக புதுச்சேரியை தேர்ந்தெடுத்துள்ளது.

சுய வேலைவாய்ப்பு பயிற்சி: விண்ணப்பம் வரவேற்பு

சுய வேலைவாய்ப்பு பயிற்சி: விண்ணப்பம் வரவேற்பு புதுச்சேரி, ஜூலை 7- புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் ஆரி ஒர்க் மற்றும் எம்பிராய்டரி  பயிற்சிக்கு புதுச்சேரியைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். 30 நாட்கள் நடைபெறும் முழு நேர பயிற்சியில் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி வருகிற ஜூலை 15 ஆம் தேதி முதல் துவங்குகிறது. மேலும் சந்தேகங்களுக்கு  9043489659 மற்றும் 0413-2246500 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என நிறுவனத்தின் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கனூரில் மக்கள் குறைதீர்வு முகாம்

புதுச்சேரி, ஜூலை 7-  திருக்கனூர் மற்றும் அதை சுற்றியுள்ள பொது மக்கள் நலனுக்காக சனிக்கிழமையன்று  (ஜூலை 6) மக்கள் குறை தீர்வு முகாம் கூனிச்சம்பட்டு அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது.  இந்த முகாமில் திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் புதிய ஆதார் பதிவு, பதிவுகள் மாற்றம் இதர சேவைகள், அரசு கட்டணத்துடன் திருத்திய சேவைகள் நடைபெறும். மண்ணாடிபட்டு கொம்யூன் மூலம் பொதுமக்கள் வீட்டு வரி, குடிநீர், சொத்து வரி வசூலிக்கப்படும். உடல் நலனுக்கான ஆரம்ப சுகா தார நிலைய மருத்துவ முகா மும் நடைபெற்றது. ஒன்றிய அரசு மூலம் வழங்கப்படும் கடன்கள், காப்பீடுகள் இதர சேவைகளை முகாமில் பங்கேற்கும் இந்தியன் வங்கி மேலாளரிடம்  சந்தேகங்களை கேட்டு பெறலாம். சட்ட ஆலோ சனைகளும் முகாமில் வழங்கப்படும். இந்த முகாமில் பொதுமக்கள் குறைகளை நேரடியாகவோ எழுத்து  பூர்வமாகவோ தெரிவிக்கலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப் பட்டுள்ளது.