சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் ஒப்புதல்: போராட்டம் ஒத்திவைப்பு
சென்னை, ஜன.24 திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகில் உள்ள நல்லூர் ஊராட்சியில். அரிசி ஆலை, சிறு வர்த்தக நிறுவனங்கள், கலைஞர் கருணாநிதி சாலையையொட்டி அமைந்துள்ளது. இந்த ஒன்றிய சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பாதசாரிகள் சேற்றில் நடந்து செல்கின்றனர். வாகனங்களும் ஊர்ந்து செல்கின்றன. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலை இது என்பதால், இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொது மக்களிடம் கையொழுத்து இயக்கம் நடத்தி, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மூன்று மாதங்களுக்கு முன்பு இரண்டு முறை மனு அளித்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் ஒன்றிய சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் எனவும், பாப்பா உமாநாத் முக்கிய
என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பணி உத்தரவுகளை வழங்கிய அமைச்சர்
சிதம்பரம், ஜன. 24- சிதம்பரம் சாராட்சியர் அலுவலகத்தில், நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கையகப் படுத்துவது தொடர்பாக கரிவெட்டி, கத்தாழை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நில உரிமையாளர்கள் விவ சாயிகள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கருத்து கேட்பு கூட்டம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கத்துறை இயக்குநர், சிதம்பரம் சாராட்சியர் ஸ்ரீவேதா சுமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் என்எல்சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்த வகையில் தமிழ்நாடு அரசு உயர்த்தப்பட்ட இழப்பீடாக ஏக்கருக்கு ரூ 25 லட்சம் வழங்கியது திருப்தி அளிப்பதாகவும், என்எல்சியில் உள்ள சொசைட்டி மூலமாக வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு வேளாண் துறை அமைச்சர் தகுதியுடைய நபர்களுக்கு பணி வழங்கப்படும் என உறுதியளித்தார். அதனடிப்படையில் கரிவெட்டி, கத்தாழை கிராமத்தில் என்எல்சிக்கு நிலம் கொடுத்த நில உரிமையாளர்கள் சுமார் 10 பேருக்கு என்எல்சி சொசைட்டியில் பணி நியமன ஆணையை அமைச்சர் வழங்கினார்.
கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
விழுப்புரம், ஜன.24- கால்நடை பராமரிப்புத்துறை மூலம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அடங்குணம், கோலியனூர் ஒன்றியம் குடுமியாங்குப்பம், வானூர் ஒன்றியம் பூத்துறை, விக்கிரவாண்டி ஒன்றியம் எசாலம், மேல்மலையனூர் ஒன்றியம் சாத்தனந்தல், வல்லம் ஒன்றியம் ஏதாநெமிலி ஆகிய ஊராட்சிகளில் புதன்கிழமையும் (ஜன. 25), செஞ்சி ஒன்றியம் பொன்னங்குப்பம், மயிலம் ஒன்றியம் கேணிப்பட்டு, திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் ஏமப்பூர், கொளத்தூர் ஆகிய ஊராட்சிகளில் வெள்ளிக்கிழமையும் (ஜன. 27) நடக்கிறது. கண்டமங்கலம் ஒன்றியம் தாண்டவமூர்த்திப் பாளையம், கோலியனூர் ஒன்றியம் கொளத்தூர், வல்லம் ஒன்றியம் மொடையூர், மரக்காணம் ஒன்றியம் கீழ்அருங்குணம் ஆகிய ஊராட்சிகளில் சனிக்கிழமையும் (ஜன. 28)), விக்கிரவாண்டி ஒன்றியம் தும்பூர் ஊராட்சியில் 31ஆம் தேதியும் முகாம் நடைபெறவுள்ளது.
பிப்.3ல் புதுச்சேரி சட்டப் பேரவை கூடுகிறது
புதுச்சேரி,ஜன.24- புதுச்சேரி பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் செவ்வாயன்று (ஜன. 24) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சட்டப் பேரவையின் கூட்டத்தொடர் பிப்ரவரி 3ஆம் தேதி துவங்குகிறது” என்றார். அரசின் திட்டப் பணிகளுக்கான செலவுகளுக்கு சான்றிதழ் வழங்கப் படாததால் புதிதாக நிதி பெற முடி யாமல் இருந்தது. 2015-16 முதல் 526 கேள்விகளுக்கு தற்போது பதில் பெறப்பட்டு ஒன்றிய அர சிற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய தலைமை கணக்கு அதிகாரி தலைமையில் கூட்டமும் நடத்தப் பட்டுள்ளது. இன்னும் 200 கேள்வி களுக்கு பதில் அளிக்க வேண்டி யுள்ளது என்றும் கூறினார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் தோல் உற்பத்தியில் கவனம்
சென்னை, ஜன.24- சுற்றுச் சூழக்கு உகந்த வழிமுறை களில் தோல் உற்பத்தியில் தமிழக தோல் தொழில்துறையினர் கவனம் செலுத்தி வருவதாக இந்திய தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதி யாளர்கள் சங்கத்தின் (ஐ.எப்.எல்.எம்.இ.ஏ) தலைவரான கே.ஆர்.விஜயன் தெரிவித்துள்ளார். சென்னையில் அகில இந்திய தோல் கண்காட்சி ஜன31 முதல் பிப் 2 வரை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடை பெறவுள்ளது. இதைமுன்னிட்டு நடை பெறவுள்ள தோல் பொருள் பேஷன் ஷோ குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச அளவில் வாடிக்கை யாளர்களிடம் சுற்றுச்சூழல் பாதிக்கப் படாமல் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்றார். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தோல் பதனிடும் ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை முழுவதுமாக சுத்திகரித்து வெளியேற்றுவதில் கவனம் செலுத்துவதோடு கழிவு பொருட்களை கொண்டு ஆக்கப்பூர்வமான பொருட்களும் தயாரிக்கப்படுவதாக கூறினார். ஐரோப்பிய நாடுகள் தொழில்புரட்சிக்கு பின்னர் சுற்றுச்சூழலை நாசப்படுத்தி விட்டு தற்போது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதாக தோல் பொருள் பேஷன் ஷோ அமைப்பாளர் யாவர் தலா கூறினார். தோல் பொருட்கள் உற்பத்தியில் சீனா, வியட்நாம் முன்னிலை வகித்தாலும் தற்போது வியட்நாமில் அதிகளவில் நிறு வனங்கள் அமைந்துவிட்டதால் அந்த தொழில் துறையினர் இந்தியா, பங்களா தேஷ் போன்ற நாடுகளில் கவனம் செலுத்து வதாக சபா குழுமத்தின் தலைவர் எஸ்.கே.சபாபதி தெரிவித்தார். தோல் பதனிடும் ஆலைகளில் பாதுகாப்பான ரசாயனங்களைப் பயன்படுத்துகிறோம், சுற்றுச்சூழல் பாதிப்பை, கரியமில உமிழ்வைக் குறைக்கவும் முயற்சி செய்கிறோம் என்றும் அவர் கூறினார்.