இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், புதுச்சேரி விடுதலை போராட்ட மக்கள் தலைவர் வ. சுப்பையாவின் பிறந்த நாளையொட்டி நெல்லித்தோப்பு சிக்னலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய். ெஜ.சரவணகுமார், பேரவைத் துணைத் தலைவர் ராஜவேல் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இடதுசாரி தலைவர்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களை சேர்ந்தவர்கள் வ.சுப்பையா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.