புதுச்சேரி,பிப்.23- ஊழல் புகார்களில் சிக்கி யுள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு 6000த்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்க்கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரிய ராகப் பணியாற்றிய குருமீத்சிங் தற்போது புதுச்சேரி மத்திய பல்கலைகழக துணைவேந்தராக இருந்து வருகிறார். குருமீத் சிங் மீது தில்லி பல்கலைக்கழகம் பல்வேறு புகார்களை தெரி வித்துள்ளது. இதன் மூலம் கடந்த 6 ஆண்டுகளாக இவர் மீது சொல்லப்பட்ட பல்வேறு புகார்கள் தற்போது உண்மை யாகி உள்ளது. இந்த துணைவேந்தர் தலை மையிலான புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் கல்விக்கட்டணத்தை தாறு மாறாக 50 விழுக்காடு முதல் 200 விழுக்காடு வரை உயர்த்தி ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி பயிலும் வாய்ப்பை பறிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும் 20 ஆண்டு களாக இயக்கப்பட்ட இலவச பேருந்து சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் அமைப்ப தற்காக காலாப்பட்டில் 760 ஏக்கர் நிலத்தை புதுச்சேரி அரசு இலவசமாக வழங்கியது. அப்போது, 21 படிப்புகளில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பல்கலைக்கழகம் வழங்கியது. பல்கலைக் கழகத்தில் தற்போது நடத்தப்படும் படிப்பு களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 21 படிப்புகளை தவிர்த்து, மற்ற 53 படிப்புகளில் உள்ளூர் மாண வர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமல் பார்த்து வரு கிறார். ஏற்கனவே, இவர் மீது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய பணியாளர் நியமனம், கட்டு மானப்பணி, ஒப்பந்த முறைகேடு தொடர்கிறது. அவரது பதவிக் காலம் முடிந்த பின்புமும் தொடர்ந்து பதவியில் நீடிக்க துணை வேந்தர் தேடுதல் குழு அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். மேலும் புதுச்சேரி மாண வர்களின் நலன்களுக்கு எதி ராகவும் செயல்பட்டு வருவதாக பல்வேறு புகார்கள் இருந்து வரும் நிலையில் தற்போது தில்லியில் உள்ள மத்திய பல்கலை கழகமும் முக்கியமான புகார் அளித்து இருக்கும் நிலையில், குருமீத்சிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். கடந்த 2017 முதல் இதுவரை நடைபெற்ற கட்டுமான பணிகள், புதிய பணி நியமனங்களை முழுமையாக ஆய்வு செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தி ருக்கிறார்.