திருவள்ளூர், ஜூலை 20-
பூந்தமல்லியில் டிரங்க் சாலையில் அரசு மருத்து வமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளா கத்தில் வியாழனன்று வாலிபர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட நோயாளிகள் அதிர்ச்சியில் உரைந்தனர். தகவல் அறிந்ததும் பூந்தமல்லி காவல்துறையினர் வந்து உடலை கைப்பற்றி பரிசோ தனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 35 வயதான அந்த நபர் யார் யார்? எந்த பகுதியை சேர்ந்த வர் என்று தெரியவில்லை.