அம்பத்தூர், ஜன. 4- அம்பத்தூர் கருக்கு பிரதான சாலை யில் வியாழனன்று (ஜன. 4) திடீரென்று பள்ளம் ஏற்பட்டு, உள்வாங்கிய சாலையை அதிகாரிகள் சீரமைத்து வருகின்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அம்பத்தூரில் இருந்து கொரட்டூர், வெங்கடாபுரம், மேனாம்பேடு, கருக்கு வழியாக செல்லும் சாலையை கருக்கு பிரதான சாலை என மக்கள் அழைக்கின்ற னர். அம்பத்தூரில் இருந்து கொரட்டூருக்கு சிடிஎச் சாலை வழியாக செல்வதால் போக்கு வரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இந்நிலையில் வியாழக்கிழமை அதி காலை கருக்கு பிரதான சாலை, அம்மா உணவகம் அருகே சாலையின் மையப்பகுதி யில் திடீர் பள்ளம் ஏற்பட்டு சாலை உள்வாங்கி இருந்தது. இதுகுறித்து அம்பத்தூர் காவல் துறையினர் அம்பத்தூர் மண்டல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமு வேல், மண்டலக் குழுத்தலைவர் பி.கே. மூர்த்தி, மாநகராட்சி உறுப்பினர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் சென்றனர். பின்னர் சாலையில் தடுப்பு அமைத்து போக்கு வரத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் சாலையில் உள்ள பள்ளத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, 20 அடி ஆழத்திற்கு, 10 அடி அகலத்திற்கு சாலை உள்வாங்கியதும், அங்குள்ள கழிவு நீர் குழாயில் இருந்து கழிவுநீர் உள்ளுக் குள்ளே ஆறாக ஓடியதும் தெரியவந்தது. பின்னர் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அதிகாரிகள், அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் இணைந்து பொக்லைன் எந்திரம் மூலம் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சாலை முழுமை யாக சீரமைக்க 2 நாட்களுக்கு மேலாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதை யடுத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று பாதையில் இயக்கப்படுகிறது.