விழுப்புரம், ஜூன் 26-
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற் குட்பட்ட தென்னங்கத்தூர் கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க பாறை வெடி வைத்து உடைப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
நங்காத்தூர் கிராமத்தில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னாள் உருவாக்கப்பட்ட எழுத்து பாறைகளும், சிலை வடிக்கப்பட்ட சிற்பங்க ளும், ராட்சத கல் தூண்களும் உள்ள பாறையை தற்போது வெடிவைத்து தகர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளது.
அதனால் மாவட்ட ஆட்சி யர் வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த அந்த பாறை களை வெடிவைத்து உடைப் பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.