கடலூர், ஜூன் 12-
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று (ஜூன் 12) நடை பெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தின் போது மாற்றுத்திறனாளி இளைஞருடன் அவ ரது குடும்பத்தினர் வந்தனர். திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணென்ணையை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது, பாதுகாப்பில் இருந்த காவலர்கள் உடனடி யாக தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
இவர் பண்ருட்டி அடுத்த வீரசிங்கன் குப்பத்தை சேர்ந்தவர் சரவணன் என்பதும் இவரது தாய், மனைவி, மாற்றுத்திறனாளி மகன், சிறுவன் உள்பட 5 பேர் வந்திருந்ததும் தெரியவந்தது.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரண மாக சரவணன் வீட்டையும், காரையும் அடித்து உடைத்து தீ வைத்து கொளுத்தியுள்ளனர். மேலும் இந்த ஊருக்குள் வரக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர்.
இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை கண்காணிப் பாளர் அலுவலகத்தில் மனு அளித்தும், பல்வேறு கட்ட போராட்டம் நடத்திய பிறகு, சம்பந்தப்பட்ட ராஜ்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சரவணனின் மனைவி ஊருக்கு சென்றபோது, அங்குள்ள ஒரு சிலர் நீயும் உனது கணவரும் ஊருக் குள் வரக்கூடாது. இதனை மீறி வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி யது தெரியவந்தது. இதையடுத்து இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க காவல்துறையினர் அறிவுறுத்தினர்.