districts

img

ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்  அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று (ஆக.7) நடைபெற்றது. முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்ட நிதியில் அதிநவீன செயற்கை அவயங்கள் செய்து வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டில் 3  மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கை, கால் அவயம் ஆகியவற்றை வழங்கினார். விபத்துகளில் நேரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறார்களின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலையை வழங்கினார்.