சிதம்பரம், மார்ச் 27- சுரண்டல் பேர் வழிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்கவேண்டும் என்று விடு தலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனை ஆதரித்து சிதம்பரம், புவனகிரி மற்றும் காட்டு மன்னார்கோயில் ஆகிய சட்டமன்ற தொகுதி களுக்கான கூட்டணி கட்சி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமை நடந்தது. இந்தக் கூட்டத்தில் தொல். திருமாவளவன் பேசியதாவது: அரியலூர் மாவட்டத்திற்கும் கடலூர் மாவட்டத்திற்கும் இடையே அமைச்சர்க ளுக்குள் யார் எவ்வளவு வாக்குகள் வாங்குவது என்பது குறித்து சவால்கள் எழுந்துள்ளது. இந்த தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என இங்கு பேசிய அனைவரும் குறிப்பிட்டனர். மக்களின் மொழியில் பேசி நிர்வாகிகளை உழைக்க செய்பவர் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். அரியலூரில் கடந்த தேர்தலின்போது பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி வாக்கு சேகரித்தவர் அமைச்சர் சிவசங்கர். திமுகவினர் எப்படி செயல் திட்டங்களை வகுக்கிறார்களோ, அதனை முன்னெடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வாக்கு சேகரிக்க வேண்டும். இந்த கூட்டணி சமூக நீதி அடிப்படை யிலான கூட்டணி. அமைதி, சமூக நல்லி ணக்கம்தான் முதன்மையானது. இதை நான் தேர்தலுக்காக சொல்லவில்லை. இந்த தொகுதியில் தொழில், வியாபாரம், சமூக அமைதி போன்றவை இதுவரை பாதிக்கப்பட்டதா என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். பாஜக சமூக நீதிக்கு எதிரான கட்சி. சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு போன்ற எந்த திட்டங்களுக்கும் திருமாவளவன் எதிராக நின்றதில்லை. மண்டல் பரிந்துரையை அறிவித்தவுடன் அதை ஏற்று அதை ஆதரித்து மதுரையில் பேரணி நடத்தியது விடுதலைச் சிறுத்தை கள் கட்சி. சமூக நீதிக்கு எதிரான கும்ப லோடு திருமாவளவன் கைகோர்க்க மாட்டான். பாஜகவோடு பாமக சேர்ந்துள்ளது. சமூக நீதிக்கு எதிரான கட்சி யோடு பாமக கூட்டணி சேர்ந்து இருக்கிறது. தன்னுடன் கூட்டணி சேரும் கட்சிகள் நீர்த்துப் போகச் செய்யும் கட்சி பாஜக. ராம் விலாஸ் பஸ்வான் கட்சி, சிவசேனா போன்ற கட்சிகள் அதற்கு உதாரணம். இன்றைக்கு இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக திகழ்ந்து கொண்டிருப்பது ராகுல்காந்தி மட்டுமே. மோடி போன்ற சுரண்டல் பேர்வழிகளிடமிருந்து இந்த நாட்டை மீட்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக தமிழ கத்தின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என திருமாவளவன் பேசினார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கணேசன், சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், ஐயப்பன், சபா. ராஜேந்திரன், சிந்தனைச்செல்வன், ராதாகிருஷ்ணன் சிந்தனைச்செல்வன், கடலூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.