சென்னை, நவ.6- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில், பயணி கள் வெளியில் இருந்து நேரடியாக நடை மேம்பாலத்தில் ஏறும் வகையிலும், இறங்கும் வகையிலும் அமைக்கப் பட்டுள்ள 2 நகரும் படிக்கட்டுகளும் பெரும்பாலான நேரங்களில் நகராமல் நிற்பதால் பயணி கள் பெரிதும் அவதிப்படு கின்றனர். அதே போன்று, 5 முதல் 9-வது வரையிலான நடைமேடைகளில் உள்ள நகரும் படிக்கட்டுகளும் பல நேரங்களில் நகராமல் தான் நிற்கின்றன. மேலும், 10-வது நடைமேடையில் உள்ள நகரும் படிக்கட்டும், ரயில் நிலையத்தின் பின்பகுதியில் கிழக்குப் பகுதி நடை மேம்பாலத்திற்கு செல்வதற்கான நகரும் படிக்கட்டும் நீண்ட நாட்களாக இயங்காமல் பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. இந்த நிலையில், எழும்பூர் ரயில் நிலை யத்தின் பின்பகுதியில் கிழக்குப்பகுதி நடை மேம்பாலத்திற்கு செல்வ தற்கான நகரும் படிக்கட்டு ஒன்றைத் தவிர அனைத்து நகரும் படிக்கட்டுகளும் சரிசெய்யப்பட்டது. எழும்பூர் ரயில் நிலை யத்தின் பின்பகுதியில் கிழக்குப்பகுதி நடை மேம்பாலத்திற்கு செல்வ தற்கான நகரும் படிக்கட்டானது, அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட இருப்பதால் அந்த ஒரு நகரும்படிக்கட்டு மட்டும் பின்னர் செயல்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.