ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9000 வழங்க வலியுறுத்தி இ பி எஃப் ஓய்வூதியர் சங்க தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் ஓசூரில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. பொருளாளர் தேன் சாமி, அசோக் லேலண்ட் யூனிட் 1 செயலாளர் ராஜாமணி துவக்கி வைத்தார். ஐஎன்டியுசி தேசிய செயலாளர் மனோகரன், இபிஎஃப் சங்க மாநிலத் துணைச் செயலாளர் உமாகாந்தன், சிஐடியு மாவட்டத் தலைவர் வாசுதேவன், தொமுச பேரவை மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட தலைவர் துரை, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.பி. ஜெயராமன் ஆகியோர் உரையாற்றினர்.