சென்னை, செப். 23 - கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் எஞ்சிய 43 ஏக்கரில் ஏழை எளிய மக்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டித் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடி யாக கையகப்படுத்தி, மக்கள் பயன்பாடிற்கு கொண்டு வர வேண்டும், ரேஸ் கிளப் நிலத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு மையத்தை யும், ஏழை எளிய மக்களுக்கான குடி யிருப்புக்களையும் அமைக்க வேண்டும், கோயம்பேடு பேருந்து நிலையத்தை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்ட கல்வி வளாகமாக மாற்ற வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.18ந் தேதி கிளப் முன்பு சிபிஎம் நடத்தியது. இந்தப் போராட்டத்தில் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். இதனையடுத்து தமிழ்நாடு அரசு கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மாபெரும் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித் திருப்பதை கட்சி வரவேற்கிறது. அரசு கையகப்படுத்திய நிலத்தில் பசுமை வெளி பூங்கா அமைக்கும் அரசின் முடிவும் காலத்தின் தேவையே. ரேஸ் கிளப் நிர்வாகத்திடம் இருந்து நிலத்தை கையகப் படுத்திய அதேநேரத்தில், குத்தகை பாக்கி சுமார் ரூ. 800 கோடி ரூபாயை வட்டியுடன் வசூலிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அரசின் செய்திக்குறிப்பில், 160.86 ஏக்கர் நிலம் மக்களின் பயன்பாட்டிற்காக கையகப் படுத்தப்பட்டுள்ளது. இதில், 118 ஏக்கர் நிலம் தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறைக்கு நில மாற்றம் செய்து உத்தரவிடப் பட்டுள்ளது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. சென்னை மாநகர குடிசை மக்களை செம்மஞ்சேரி, கண்ணகி நகருக்கு அனுப்பு வதற்கு மாறாக, நகருக்குள்ளேயே குடியமர்த்த எஞ்சிய 43 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும். சென்னையின் பசுமைப் பகுதியை அதிகரிக்கும் நோக்கில் கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த நோக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகை யில் பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் பசுமை சூழலை சிதைத்திடமால் பாதுகாக் கும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். சென்னை மாநகரம் விரிவடைந்து வரும் நிலையில் சென்னை மக்களுக்கு இருப்பிடம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வசதி களை செய்ய அரசுக்கு நிலம் தேவைப்படு கிறது. சென்னைக்குள் சட்டக் கல்லூரி அமைக்க இடம் இல்லை என்று நீதிமன்றத் தில் அரசு தெரிவித்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தில் கல்வி வளாகம் அமைத்து, கலை அறிவி யல் கல்லூரி மற்றும் அரசு சட்டக் கல்லூரியை தொடங்க அரசு ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.