இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாநகர் காட்டூர் பகுதி குழு அம்மாக்குளம் கிளைச் செயலாளர் தவ்பீக் மீது கொடூர தாக்குதல் நடத்திய சமூக விரோத கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பெரம்பூர் பகுதிதுணைச் செயலாளர் சுரேந்தர் தலைமையில் எம்.கே.பி. நகரில் சனிக்கிழமை (ஜூன் 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில குழு உறுப்பினர் அபிராமி, மாவட்டத் தலைவர் நித்யராஜ், பகுதிச் செயலாளர் கார்த்திக், பொருளாளர் சுபாஷ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் நிதிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.