districts

சென்னை முக்கிய செய்திகள்

2025 -இல்   வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை

சென்னை,டிச.24- வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் விரிவாக்க திட்டம் 2008 ஆம் ஆண்டு 495 கோடி ரூபாய் மதிப்பீட் டில் தொடங்கப்பட்ட இந்த விரி வாக்க திட்டத்தின் செலவு தற்போது ரூ.734 கோடி யாக உயர்ந்துள்ளது. இந்நிலை யத்தில் விரிவாக்க திட்டம் நிலம் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக இடை யில் முடங்கியது. நீதிமன்ற தலையீட்டின்பின் 2022 இல் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இறுதிக்கட்ட பணிகள் முடிந்ததும் மார்ச் 2025 மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த சேவை தொடங்கும்பட்சத்தில் சென்னையில் சுமார் 5 லட்சம் மக்கள் பயனடைவர் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும்.

‘ஏஐ’ கொள்கை ஆலோசகராக  எஸ்ஆர்எம் மாணவர்

சென்னை, டிச.24- அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை அலுவலகத்தின் செயற்கை நுண்ணறிவிற்கான (ஏஐ) முதுநிலை கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் & டெக்னாலஜியின் (எஸ்ஆர்எம்ஐஎஸ்டி)  முன்னாள் மாண வர் என அந்த கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்திற்கான பட்டப்படிப்பை 2005-ம் ஆண்டு நிறைவுசெய்த ஸ்ரீராமின் பயணம் அசாதாரணமானது. எஸ்ஆம்எம் – ல் அதிக நம்பிக்கையைத் தரும் சிறந்த மாணவர் என்பதிலிருந்து, உலகளாவிய செயற்கை நுண்ணறிவு கொள்கையை உருவாக்குவதில் ஒரு முக்கிய நபராக ஸ்ரீராம் உருவெடுத்திருப்பது இப்பல்கலைக்கழகத்திற்கு பெருமையை சேர்த்தி ருக்கிறது. இந்த சாதனைப் பயணமானது, அவரது அறிவுத்திறனையும் மற்றும் அதே வேளையில் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கின்ற தலை வர்களை எஸ்ஆர்எம் உருவாக்குவதாக அந்த பல்கலைக்கழக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தங்கம் விலை சற்று குறைந்தது

சென்னை, டிச. 24- தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.56,720-க்கும் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,090-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 99 ரூபாய்க்கு, பார் வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

சென்னை, டிச. 24- ஒடிசா, ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்திக் கொண்டு பெரம்பூர் நிலை யம் நிலையம் வருவ தாக அண்ணாநகர் மது விலக்கு பிரிவு காவல் துறையினருக்கு ரகசித் தகவல் கிடைத்தது. இதை யடுத்து தனிப்படை காவல் துறைக்யினர் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மாறு வேடத்தில் ரயில்களை கண்காணித்தனர். அப்போது ஒரு வாலிபர் கையில் பார்சலுடன் வந்தார். அவரை பிடிக்க காவல் துறையினர் சென்ற போது பார்சலை அங்கேயே போட்டுவிட்டு அந்த நபர் தப்பிக்க முயன்றபோது விரட்டி சென்று அந்த நபரை கைது செய்தனர். பார்சலை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது. இதையடுத்து கஞ்சா கடத்திவந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (26) என்பவரை கைது செய்தனர். அதே போல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது ஒரு வாலிபர் ஆந்திராவில் இருந்து பேருந்து மூலம் பெரிய பார்சலுடன் வந்தார். பின்னர் அவர் கடலூர் செல்லும் பேருந்தில் ஏறும்போது காவல் துறையினர் அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் பண்ருட்டி பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி தமிழரசன் (26) என்பதும், அவ ரிடம் இருந்த 4 கிலோ கஞ்சா மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

வழக்குகளை முறையாக நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கோரிக்கை

திருவண்ணாமலை,டிச.24- தமிழகத்தில் அர்ச்சகர் வழக்கு களை முறையாக நடத்த  ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவினை நியமிக்க வேண்டும் என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கங்ள சங்கம், தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,   2021 இல் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  28  அனைத்து சாதிஅர்ச்சக மாணவர்களை கோயில் அர்ச்சகர்களாக நியமனம் செய்தார். அந்த அர்ச்சகர்களுக்கு ஏராளமான நெருக்கடிகளை ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள்  கொடுத்தாலும் அதையும் தாண்டி சிறப்பான முறையில் கோயில்களில் பூஜை செய்து குடமுழுக்கு நடத்தி மக்கள் மத்தியில் முறையான அங்கீகாரத்தை பார்ப்பனரல்லாத 28 அர்ச்சகர்களும் பெற்றுள்ளனர். அனைத்து சாதி இந்துக்களும் அர்ச்சகர் ஆவதை தொடர்ச்சியாக எதிர்த்து வரும் உயர்சாதி இந்துக்கள், ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணியினர் தொடர்ந்து அர்ச்சகர் நியமனத்துக்கு எதிரான பல்வேறு முட்டுக்கட்டைகளை உரு வாக்கி உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதி மன்றங்களில் வழக்குத் தொடுத்து தற்போது தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர் நியமனம் செய்ய உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு   விதித்த தடை கடந்த ஒன்னரை ஆண்டுகளாக  நீக்கப்பட வில்லை. இந்து சமய அறநிலைத் துறை அதற்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அர்ச்சகர் நியமனம் தொடர்பாக விதிகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பின்பு, இதுவரை புதிய விதிகளுக்கான எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகத்தில் உள்ள கோயில்களை ஆகம கோயில், ஆகம அல்லாத கோயில் எனப் பிரிக்கலாம் என்று இந்து சமய அறநிலைத்துறையே நீதிமன்றத்தில் சொல்லிவிட்டது. பார்ப்பனர்களுக்கு ஆகம கோயில், பார்ப்பனரல்லாத திராவிடருக்கு மற்ற கோவில்கள்  என்ற வகையிலான சமரசத்திற்கு அறநிலையத்துறை சென்று விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அர்ச்சகர் நியமனத்திற்கான ஆகமங்களில், சாதி தடையாக இருக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும் அர்ச்சகர் நியமன நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவே, இட ஒதுக்கீடு அடிப்படையில் விரைந்து கோயில்களில் உடனடியாக அர்ச்சகர் பணிநியமனத்தை  நடத்த வேண்டும். மிக முக்கியமாக,  எங்களுடன் 2008 ஆம் ஆண்டிலேயே பயிற்சி முடித்து தீட்சை பெற்ற 100-க்கும் மேலான மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு உடனே பணிநியமனம் வழங்க வேண்டும். இன்றுவரை மதுரை மீனாட்சியம்மன், திருச்செந்தூர், பழனி முருகன் கோயில்கள், திரு வரங்கம் அரங்கநாதர், சென்னை கபாலீசுவரர் கோயில்களில் பார்பனர் அல்லாதவர்கள்  கோயில் கருவறையில் நுழைய முடியவில்லை என்பது கடும் வேதனைக்குரியது. எனவே  தந்தை பெரியார் நினைவு நாளான  இந்நாளில் தமிழக முதல்வர் தமிழ்  மக்கள் உழைப்பில் உருவாக்கப்பட்ட கோயில்களில் தமி ழையும் தமிழர்களையும் நிலைபெறச் செய்யும் வகையில், தடையற்ற அர்ச்சகர் நிய மனத்திற்கு உரிய சட்ட ஆலோசனை வழங்க தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர் குழு அமைக்க வேண்டும். அனைத்து சாதி இந்துக்கள் அர்ச்சகர் நியமனத்திற்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள், ஆன்மிக அமைப்புகள்  அனைவரும் ஒன்று சேர்ந்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு ஆதரவாக துணை நிற்க வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளார்.

சுற்றுச்சூழல் அனுமதி கோரியது கார் தொழிற்சாலை

ராணிப்பேட்டை,டிச.24- தமிழ்நாட்டில் ஜாகுவார் லேண்ட்ரோவர் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ராணிப்பேட்டையில் இடம் தேர்வு செய்யப்பட்டு 190 ஹெக்டேர் பரப்பளவில் தொழிற்சாலையை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது முதல்கட்டமாக ரூ.914 கோடியில் தொழிற் சாலைக்கான கட்டுமான பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு ஜாகுவார் லேண்ட்ரோவர் வகை கார்களை உற்பத்தி செய்வ தற்கு டாடா மோட்டார்ஸ் நிறு வனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆலைக்கு செப். 28-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி இருந்தார். இதைத் தொடர்ந்து கட்டு மான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்த ஆலையில் முதல் கட்டமாக 1650 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.