தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தையொட்டி சிறப்பான சேவை செய்த 80 குருதி கொடை முகாம் ஒருங்கிணைப்பாளர்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு பாராட்டினார். அதிகப்படியான ரத்த தானம் பெற்று தந்த கெலமங்கலம் மருத்துவமனை அலுவலர் மருத்துவர் ராஜேஷ்குமாருக்கு பாராட்டு தெரிவித்து ஆட்சியர் சிறப்புச் சான்றிதழை வழங்கினார்.