districts

img

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் 71.87 விழுக்காடு வாக்குகள் பதிவு

திருவள்ளூர், ஏப்.19- திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக் குட்பட்ட திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, மாதவரம், பூந்த மல்லி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடை பெற்றது. இந்த தொகுதியில் மாலை 7 மணி நிலவரப்படி 71.87 விழுக்காடு வாக்கு கள் பதிவாகியிருந்தது.  மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளர் சீனிவாச பெருமாள் தலைமையில் 35 பறக்கும் படைகள், 22 அதிவிரைவு படை கள் அமைக்கப்பட்டு 1065 காவல்துறை அதி காரிகள் மற்றும் காவலர்கள் தேர்தல்  பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  மேலும், 268 மத்திய பாதுகாப்பு படை யினர், 90 தமிழ்நாடு சிறப்பு காவல் படை யினர், 462 முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். இதே போல் பொன்னேரி, ஆவடி, மாத வரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் ஆவடி மாநகரகாவல்துறை ஆணையர் சங்கர் தலை மையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர்.  அனைத்து வாக்குச்சாவடி களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இணையதளம் வழியாக கண்காணிக்கப்பட்டது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக காவல் துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.