சென்னை, அக்.10- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பட்டாசு கடைகள் 17-ந்தேதிக் குள் திறக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கி றது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டி கையையொட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வரு கின்றன. தற்போதைய சூழலில் தீவுத்திட லில் 40 பட்டாசு கடைகள் அமைக்க திட்ட மிடப்பட்டு, அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. வரையறுத்த விதிமுறைகளின்படி 10 அடி இடைவெளி யில் ஒவ்வொரு கடையும் அமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் முழுவதும் நிறைவடைந்து வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதிக்குள்ளாக பட்டாசு கடைகள் திறக்கப்படும் என்று எதிர் பார்ப்பதாக பட்டாசு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.