கடலூர், செப். 27- கடலூர் பெண்ணை ஆற்றில் குவிந்திருந்த மூன்று டன் பிளாஸ்டிக் கழிவுகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றினர். கடலூருக்கும், புதுச்சேரிக்கும் நடுவில் பெண்ணையாறு ஓடுகிறது .இந்த ஆற்றின் குறுக்கே இரண்டு பகுதி களையும் இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த தரை பாலத்தில் அமர்ந்து இரவு நேரங்களில் மது பிரியர்கள் மதுவை குடித்துவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்பளர்கள் உள்ளிட்டவைகள் தரை பக்கத்தில் இரு பகுதிகளிலும் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இனிவரும் காலங்களில் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும் சூழலில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்பொழுது இந்த பிளாஸ்டிக் கழிவு கள் அனைத்தும் வெள்ள நீரில் அடித்துச் சென்று தாழங்குடா அருகே வங்கக் கடலில் கலந்து விடும். இத னால் வங்கக் கடலும் மாசடைந்து கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே கடலூர் அனைத்து குடி யிருப்போர் நல கூட்டமைப்பு சிறப்பு தலைவர் எம்.மருதவாணன் பொதுச் செயலாளர் பி.வெங்கடேசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகி யோருக்கு இந்த பிளாஸ்டிக் கழிவு களை அப்புறப்படுத்த வேண்டும் என்று புகார் அனுப்பி இருந்தனர். அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி ஊழியர்கள் 15க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் 3 ஆயிரம் கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் கழிவுகள் கிடப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.