districts

img

மாற்று இடம் வழங்கிய பின்னரே 276 கடைகளை அகற்றவேண்டும் சிறுவியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 16- பாரிமுனை, பூக்கடை பகுதியில் என்எஸ்சி போஸ் சாலையில் நடை பாதை கடைகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. இதைத் தொடர்ந்து, வியா ழன்று  காலை 100க்கும் மேற்பட்ட கடைகளை புல்டோசர் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வரு கிறது. சென்னை பூக்கடை காவல் நிலை யம் முதல் பாரிமுனை, என்எஸ்சி  போஸ் சாலை பகுதிகளில் மக்கள்  நடந்து செல்லவேண்டிய நடை பாதையை ஆக்கிரமித்துள்ளதாக வும் கடைகளை வரும் 23-ம் தேதிக் குள் அகற்ற வேண்டும். இல்லையெ னில், அன்றைய தினம் தலைமை  செயலாளரும் மாநகராட்சி ஆணை யரும் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி 5வது மண்டலத்துக்கு உட்பட்ட 59, 60வது வார்டு பகுதி செயற்பொறியாளர் லாரன்ஸ் மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பொக்லைன் இயந்திரங்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து, சாலையோர கடைகளை இடித்து அகற்றினர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இங்கு  மொத்தம் 387 நடைபாதை கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு மாற்று  இடம் கொடுக்க டோக்கன் வழங்கப் பட்டு உள்ளது. வியாழன்று 100க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றும் பணி நடைபெறுகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து  கடைகளும் அகற்றப்படும். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று கூறினார். இதுகுறித்து சென்னை பெருநகர சிறுவியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம்.வி.கிருஷ்ணன் கூறுகையில், எங்கள் சிறுவியாபாரிகள் ஆக்கிரமிப் பாளர்கள் அல்ல, கடந்த 10 ஆண்டுக ளாக நியாயமான முறையில் வியா பாரம் செய்துவருகின்றனர். மாநக ராட்சி அதிகாரிகள் 387 கடைகள் என்று கூறுவது தவறான தகவல், அவர்கள் கூறும் 111 கடைகள் அரசு அதிகாரிகளின் இடைச்செறுகல் ஆகும். ஏற்கனவே ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் 20அடி (5X4) அளவில் 276 கடைகள் ஒதுக்கவேண்டும். அதிகாரிகள் சொல்லும் பொய் (386) கணக்கால் கடையின் அளவு குறையும் அபாயம் உள்ளது.  இந்த பகுதியில் முறைப்படி இயங்கிய 276 கடைகளுக்கு மாற்று இடம் உரிய அளவில் வழங்கிய பின்னரே அப்புறப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஐடியு தலைமையிலான சிறுவியா பாரிகள் சம்மேளனம் வழக்கு தொடுத்து  நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மாநகராட்சி ஆணையருடன் எம்.வி.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சங்க நிர்வாகிகள் முஸ்தபா, பூமிநா தன், மணிமாறன், எம்.மணி ஆகியோர் பங்கேற்றனர். சங்க நிர்வாகிகளின் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக் கப்படும் என உறுதி அளித்ததாக எம்.வி.கிருஷ்ணன் கூறினார்.