districts

img

சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் 22 வது பட்டமளிப்பு விழா

மீஞ்சூர், டிச 28- திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூரில் இயங்கி வரும் ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் 22 வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமையன்று (டிச 28), நடைபெற்றது.  கல்லூரி செயலர் லலித் ஜெயின்,இணை செயலர் சுரேஷ் ரத்தோர்,தலைவர் நேமிசந்த் கட்டாரியா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  கல்லூரி முதல்வர் சுஜாதா வரவேற்றார். இதில் கல்லூரியில் பயின்ற 327 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு,மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்,  பிரவீன் டாட்டியா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து கூறி பட்டங்களை வழங்கினார்.  பல்கலைக்கழக அளவில் முன்னிலைப்பெற்ற 9 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களும், நினைவு பரிசுகளும்,ரொக்க வெகுமதிகளும் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி பேராசிரியர்கள்,மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.