அம்பத்தூர், ஜூலை 13-
சென்னை மதுரவாயலில் சின்னத்திரை கலைஞர் வீட்டில் திருடிய இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கடந்த 9ஆம் தேதி சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் 15ஆவது தெரு பகுதியில் சின்னத் திரை நடிகர் ராஜ்கமல், நடிகை லதா ராவ் ஆகி யோருக்கு சொந்தமான சூட்டிங் பங்களா வீட்டில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பி லான டிவி, மோட்டார் ஆகியவை திருடு போனது. அதேபோல் பக்கத்து வீட்டில் வசிக்கும் பொன்.பிரபாகர் என்பவர் வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் திருடு போனது. இதுகுறித்து மதுர வாயல் காவல் நிலையத் தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேம ராவில் பதிவான காட்சி களை வைத்து மர்ம நபர் களை தேடி வந்தனர்.
இந்நிலையில் பிராட்வே, கொண்டித்தோப்பு பகுதி யைச் சேர்ந்த காஜா மொய்தீன், திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த அமீனுதீன் ஆகிய இருவரை யும் கைது செய்து, அவர்க ளிடமிருந்து டிவி மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.