சென்னை, அக். 4- சென்னை விமான நிலை யத்தில் போதிய பயணி கள் இல்லாததால் வெள்ளி யன்று 5 வருகை விமானங் கள் மற்றும் 5 புறப்பாடு விமானங்கள் என 10 விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளன. இலங்கை, பெங்களுரு, மும்பை, அந்தமான், மதுரை ஆகிய இடங்களில் இருந்து வருகை தரும் 5 விமானங் களும், சென்னையில் இருந்து இலங்கை, பெங்க ளுரு, மும்பை, அந்தமான், மதுரை ஆகிய இடங்களுக்கு புறப்பட்டு செல்லும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான சேவைகள் ரத்து குறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரி விக்கப்பட்டதால் பெரிய அளவில் சிரமங்கள் எது வும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.