சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வாசிப்பை சுவாசிப்போம் திட்டத்தில் சிறப்பாக பங்கேற்றதை பாராட்டி ரூ.7 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை பரிசாக இதயம் நிறுவனம் பள்ளி தேடி வந்து வழங்கியது. இதயம் நிறுவனத்தின் பணியாளர் ஆனந்த் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.