districts

img

காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுப்பு

சிவகங்கை,ஜூலை 14- காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓட்டை சிவகங்கை தொல் நடைக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.

சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா, செய லர் இரா.நரசிம்மன்,கள ஆய்வாளர் கா. சரவணன், துணைச்செயலர்  முத்துக் குமரன் ஆகியோர் காளை யார் கோயில் பாண்டியன் கோட்டைப்பகுதியில் மேற் பரப்பில் கள ஆய்வில்  ஈடு பட்டனர்.இதில் தமிழி எழுத்து பானை ஓடு கண் டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தி யாளர்களிடம் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவ னர், புலவர் கா. காளிராசா கூறியதாவது:

திருக்கானப்பேர் என்று சங்க காலத்தில் அழைக் கப்பட்ட காளையார் கோவி லில் சங்கக்கால கோட்டை இருந்த இடம், இன்றும் மக்களால் பாண்டியன் கோட்டை என்று அழைக் கப்படுகிறது. இக்கோட்டை யைச் சுற்றி அகழி, நடு வில் நீராவி குளம் உள்ளிட் டவை 37 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளன‌.

புறநானூற்றில் 21 ஆவது பாடலில் கானப்பேர் பாண் டியன் கோட்டை பற்றிய செய்தி  இடம்பெற்றுள்ளது. இப்பகுதியை குறுநில மன்னனான வேங்கை மார் பன் ஆட்சி செய்தபோது அவனது உறுதியான கோட்டையை பாண்டியன் உக்கிரப் பெருவழுதி வெற்றி கொண்டான். அது இரும்பு உலையில் கொ தித்த இரும்பில் நீரை ஊற்றும் போது இரும்பா னது நீரை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும். அதைப் போல பாண்டியன் உக்கி ரப் பெருவழுதியிடம்சென்ற இக்கோட்டையை மீளப் பெற முடியாது  என்னும் செய்தி அப்பாடலில் இடம் பெற்றுள்ளது.

சிதறிக் கிடக்கும் பானை ஓடுகள்

இலக்கியச் சான்றோடு வரலாற்றுச் சான்றாக இன்றும் இக்கோட்டை விளங்குகிறது. கோட் டையின் காவல் தெய்வ மாக கிழக்குப் பகுதியில் முனீஸ்வரர் கோவிலும் தெற்குப்பகுதியில் வாள் மேல் நடந்த அம்மன் கோவிலும்  அமைந்துள் ளன. இப்பகுதி முழுவதும் பானை ஓடுகள் பெருமள வில் சிதறிக் கிடக்கின்றன.

சிவகங்கை தொல் நடைக் குழு அவ்வப்போது இக்கோட்டைப் பகுதியில்  மேற்பரப்பில் கள ஆய்வு செய்து வருகிறது.

அதில் தொடர்ச்சியாக பழமையான பொருட்கள் கிடைத்து வருகின்றன. வட்டச் சில்லுகள், மேற் கூரை ஓட்டு எச்சங்கள், சங்க கால செங்கல் எச்சங்கள்,  பானை ஓட்டுக்கீறல்கள், குறியீடுகள், 2000 ஆண்டு களுக்கு பழமையான தமிழி எழுத்து  எழுதப்பட்ட பானை ஓடு, நெசவுக்கு அல்லது வேறொரு பயன் பாட்டிற்காக பயன்படுத் தப்பட்ட எலும்பாலான முனையுடைய கருவிகள் ஆகியவை முன்பு கிடைத் துள்ளன.

பானை ஓட்டில்  தமிழி எழுத்து

இரண்டு ஆண்டுகளு க்கு முன்பு மோசிதபன் என்று எழுதப்பட்ட தமிழி எழுத்து பானை ஓடு மேற் பரப்பு கள ஆய்வில் இவ்வி டத்தில் கிடைத்தது. தற்பொ ழுதும் மேற்பரப்பு கள ஆய்வில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத் தில் ‘ன் கூட்டம்’ என்று எழு தப்பட்ட பானை ஓடு ஒன்று கிடைத்துள்ளது. ‘ன்’ என் பது தனி எழுத்தாகவும் அதனை அடுத்து இடை வெளியுடன் தொடர்ந்து ‘கூட்டம்’ என்பது தொடர்ச்சி யாகவும் வந்துள்ளது.

தொல்லியல் அறிஞர்க ளின் மேலாய்வில் ‘ன் கூட்டம்’ அல்லது ‘ன் ஊட் டம்’ என வாசிக்கலாம்.

பொதுவாக பானை களில் இடமிருந்து வலமாக எழுத்துகள் எழுதப்படு வது வழக்கம். ஆனால் இப்பானை ஓட்டில்  எழுத்து கள் கீழிருந்து மேலாகவோ, மேலிருந்து கீழாகவோ எழுதப்பட்டிருக்கிறது. பானை வனைந்த சக்கர அச்சுப்பதிவு  எழுத்துக்கு நேர் மாறாக அமைந்துள் ளதால் இவ்வாறான முடி வுக்கு வர முடிகிறது.

வரலாற்றுத் தொன்மை புதைந்த மேடு 

இரண்டு  ஆண்டுகளு க்கு முன்னாள் கோட்டை யின் அருகில் உள்ள குடி யிருப்பு பகுதியில் மழை நீர் வடியாததால் நீராவி குளத்தின் இரு பக்கமும் மழைநீர் வெளியேறும் வண்ணம் மூன்றடி ஆழத் தில் கால்வாய் வெட்டப் பட்டுள்ளது. அக் கால்வாய் பள்ளத்திலே முன்பும் தற் பொழுதும் தமிழி எழுத்து பானை ஓடுகள் கிடைத்தி ருக்கின்றன. தொடர்ச்சி யாக தமிழி எழுத்து பானை ஓடு பாண்டியன் கோட்டை பகுதியில் கிடைப்பதால், இது கானப்பேர் எனும் பாண்டியன் கோட்டை அமைந்த முதன்மை பகுதி என்பதோடு வரலா ற்றுத் தொன்மை புதைந்த மேடாகவும் உள்ளது.

இவ்விடத்தில் தொல்லி யல் துறை  அகழாய்வு செய்யும் பொழுது பழமை யான வரலாறு வெளிப் படும். மேலும் தமிழி எழுத்து பொறித்த பானை ஓட்டின் மதிப்பு கருதி  சிவ கங்கை அரசு அருங்காட் சியகத்தில் ஒப்படைக்கப் படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.