சிதம்பரம், ஜன. 28- குடியரசு துணைத் தலைவர் ஜகதீப்தன்கர் திங்கள்கிழமை (ஜன.29) தனி ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் நடராஜர் கோவில், பரங்கிப் பேட்டையில் உள்ள பாபாஜி கோயில், புவனகிரியில் உள்ள எல்லியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வழிபாடு செய்கிறார்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலை யில் புவனகிரியில் உள்ள எல்லி யம்மன் கோவில் பொது கோவி லாகும். இதனை பாஜக பிரமுகரான சீனிவாசன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வர்மக்கலை, சித்த மருத்து வம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறையை செய்து வருவதாக கூறு கிறார். இந்த கோவிலுக்குள் பொது மக்கள் சென்று அம்மனை வழிபட விடாமல் அவர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த கோவிலை யொட்டியுள்ள 1.45 ஏக்கர் நிலத்தை இவர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள் ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி யுள்ளனர்.
இந்த கோவிலுக்குள் சென்று அம்மனை யாரும் வழிபட அனு மதிப்பதில்லை என்பதால் சிதம்பரம் துணை நீதிமன்றத்தில் வழக்கு எண் 14 /2020 வழக்கு உள்ளது. வரும் பிப்ரவரி 13 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இவரிடம் முன்னாள் அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் தற்போது ஜார்கண்ட் ஆளுநராக உள்ள சி.பி ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக பிர முகர்கள் ரகசியமாக சிகிச்சை பெற்று சென்றுள்ளதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இந்திய குடியரசு துணைத் தலைவர் இந்த கோவி லுக்கு வருவது சர்ச்சையை ஏற்படுத் தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் கூறுகை யில், புவனகிரி நகருக்கு குடியரசுத் துணைத்தலைவர் வருகை தருவதை வரவேற்கிறோம்.அதேநேரத்தில் அவர் வணங்க வரும் எல்லியம்மன் ஆல யத்தில் ஒருநாளும் பொதுமக்கள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவ தில்லை. அந்த ஆலயத்தின் சொத்தின் மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் குடியரசுத் துணைத்தலை வர் வருகையை குற்றம்சாட்டப் பட்டவர் தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்வார். எனவே நீதியை நிலை நாட்டமுடியுமா என சந்தேகம் எழுகிறது.
புவனகிரி பகுதியில் மக்கள் குறை களும் கோரிக்கைகளும் பல இருந்தும் அவற்றை தீர்க்க முன்வராத பேரூராட்சி நிர்வாகமும் நெடுஞ்சாலை மற்றம், பொதுப்பணித்துறையும் தனிநபரின் ஆக்கிரமிப்பு இடத்திற்கு லட்சக் கணக்கில் செலவிடுவது நியாயமா? குடியரசுத் துணைத் தலைவரின் பாது காப்பு முக்கியமானது என்றாலும் அதே அளவிற்கு பொதுமக்களின் உயிருக் கும் பாதுகாப்புவேண்டும்.புவனகிரி நகரில் விபத்துகளை தடுக்க போடப் பட்ட வேகத்தடைகள் அனைத்தும் உடைத்தெறியப்பட்டு அப்புறப்படுத் தப்பட்டுள்ளது. இதனால் இடைப்பட்ட காலங்களில் விபத்துகள் ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்றும் அவர் வின வியுள்ளார்.