தருமபுரி, பிப்.1- தருமபுரி மாவட்டத்தின் வளர்ச் சிக்கான கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும், என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தினர் சனியன்று இருசக்கர வாகன பிரச்சார இயக்கத்தில் ஈடு பட்டனர். அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். வட்டந் தோறும் அரசு சார்பில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள், வேளாண் சார்ந்த தொழிற்சாலை கள் ஏற்படுத்த வேண்டும். தருமபுரி - மொரப்பூர் இடையிலான ரயில் பாதை பணியினை விரிவுபடுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந் தைகள் மீதான பாலியல் வன்கொடு மைகளை தடுத்த நிறுத்த வேண் டும். போதைப்பொருள் புழக் கத்தை கட்டுப்படுத்த வேண்டும். பட்டா இல்லாத தகுதியான அனை வருக்கும் வீட்டுமனை, நிலப்பட்டா வழங்க வேண்டும். ஒடுக்குமுறை யற்ற ஊர்களை கட்டமைக்க வேண் டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சனியன்று இருசக்கர வாகன பிரச்சார இயக் கத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் குரளரசன் தலைமை வகித்தார். பாப்பிரெட்டிப் பட்டியிலிருந்து துவங்கிய பிரச் சார இயக்கத்தினை, தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா துவக்கி வைத் தார். அப்போது பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணல் அம்பேத் கர் சிலைக்கு மரியாதை செலுத்தப் பட்டது. துவக்க நிகழ்ச்சியில் வாலி பர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.பாரதி, மாநில துணைச்செய லாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டச் செயலாளர் எம்.அருள்குமார், துணைச்செயலாளர்கள் பி.கோவிந் தசாமி, குப்பன், பொருளாளர் சிலம் பரசன், துணைத்தலைவர்கள் பிர வீன், மீரா, வட்டத் தலைவர் குமரே சன், பொருளாளர் ராகாப்பிரியா, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உரையாற்றினர். மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப் பினர் ஏ.குமார், மாவட்டச் செயலா ளர் ஆர்.சிசுபாலன், வட்டச் செயலா ளர் தி.வ.தனுசன், அரூர் வட்டச் செயலாளர் பி.குமார், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மல் லிகா, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவர் அம்புரோஸ், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எஸ்.கே.கோவிந்தன், இ.கே.முரு கன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். பாப்பிரெட்டிப்பட்டியில் துவங் கிய பிரச்சாரம் அரூர், மொரப்பூர். கடத்தூர். கம்பைநல்லூர், காரி மங்கலம், பாலக்கோடு வரை சென் றடைந்தது. தொடர்ந்து, ஞாயி றன்று (இன்று) பாலக்கோட்டிலி ருந்து துவங்கும் இருசக்கர வாகன பிரச்சாரம் பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், இண்டூர், நல்லம் பள்ளி, தருமபுரி பிஎஸ்என்எல் அலு வலகம் அருகில் நிறைவடைகிறது.