districts

img

ஊத்துக்குளியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வாலிபர் சங்கம் கோரிக்கை

திருப்பூர், ஜூலை 4 - ஊத்துக்குளியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண் டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஊத்துக்குளி தாலுகா  மாநாடு ஞாயிறன்று ஊத்துக்குளி ஆர்.எஸ்.பேரூராட்சி  சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு தாலுகாக்குழு உறுப்பினர் பாலமுரளி தலைமை தாங்கி னார். தாலுகா பொருளாளர் மார்க்ஸ் வரவேற்றார். அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே. சரஸ்வதி, வாலிபர் சங்க முன்னாள் ஒன்றிய செயலாளர் வி. கே.பழனிசாமி, வாலிபர் சங்க முன்னாள் தாலுகா தலைவர்  எஸ்.சசிக்குமார் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். தாலுகா செயலாளர் லெனின் வேலையறிக்கை சமர்ப்பித் தார். ஊத்துக்குளி தாலுகா பகுதியில் அரசு கலைக்கல்லூரி  அமைப்பது, சென்னிமலை சாலையில் மேம்பாலம் அமைப் பது, சாலைகளைச் செப்பனிடுவது, பல்லகவுண்டம்பாளை யம் பள்ளியில் அனைத்துப் பிரிவு ஆசிரியர் காலிப்பணியி டங்களையும் நிரப்ப வேண்டும், அப்பகுதியில் புதிய பாலத் திற்கு செல்லும் சாலையை விரிவுபடுத்த வேண்டும், குன்னத் தூர், ஊத்துக்குளி பேரூராட்சிகளில் புதிய குடிநீர் இணைப்பு  வழங்க வேண்டும், ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு  பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு மக்கள்  வாழ்வாதார பிரச்சனையை விவாதித்து தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.  இம்மாநாட்டில் தாலுகா தலைவராக லெனின், செயலாள ராக கு.பாலமுரளி, பொருளாளராக விக்னேஷ், துணை தலை வராக எல்.மணிகண்டன், துணை செயலாளராக சரவணன் உட் பட 11 பேர் கொண்ட புதிய தாலுகாக்குழு தேர்வு செய்யப் பட்டது. மாவட்ட துணை செயலாளர் டி.உமா சங்கர் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.