திருப்பூர், ஜூன் 5- திருப்பூரில் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனை வளாகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் உழைப்பை தானம் செய்து தூய்மை பணி மேற்கொண்டனர். திருப்பூர் தாராபுரம் சாலையில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. தற்போது இங்கு மருத்துவக் கல்லூரி, மருத்துவ மாணவர்களுக்கான விடுதிகள், மருத் துவமனை பிரிவுகள் என தனித்தனி பெரிய கட்டிடங்கள் உள்ளன. புதிதாக மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்ட நிலையில் இங்கு கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தை ஒட்டி அதன் சுற்றுப் பகுதி களில் ஏராளமான புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. அதேசமயம் ஜேசிபி எந்திரம், டோசர் ஆகிய வாகனங்கள் அந்த இடங்களுக்கு செல்ல முடியாத படி குறுகிய பகுதிகளாக உள்ளன. எனவே, ஆட்கள் உடல் உழைப்பின் மூலம் தான் இந்த இடங்களை சுத்தப்ப டுத்த முடியும் நிலை உள்ளது.
இதையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உழைப்பு தானம் செய்து மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்த முன்வந்தனர். இதை யடுத்து ஞாயிறன்று திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் 53 வது வார்டு மார்க்சிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் ர.மணிமேகலை, 57 ஆவது மாமன்ற உறுப்பினரும், மாந கராட்சி பொது சுகாதார குழு தலை வருமான கவிதா நேதாஜி கண்ணன், மருத்துவ கல்லூரி பொறுப்பு மருத்து வர் வினோத் உள்ளிட்டவர்கள் முன் னிலை வகித்தனர். இந்த தூய்மைப் பணி இயக்கத்தை வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளருமான செ.முத்துக்கண்ணன் துவக்கி வைத் தார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து புதர்களை வெட்டி தூய்மைப் படுத்தினர். நெடு நாட்களாக பராமரிப்பு செய்யாமல் இருந்த பகுதிகளையும் அவர்கள் சுத் தம் செய்தனர். இந்நிகழ்வில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், சிஐடியு மாவட்ட தலை வருமான கே.உன்னிகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகர குழு் செயலாளர் ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், சாலை யோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பாலன், மாநகர குழு உறுப்பினர் ஜி.பொம்முதுரை, மாவட்ட குழு உறுப்பினர் பா.லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். இதில் தூய்மைப் பணியில் ஈடு பட்ட இளைஞர்களுடன் மாமன்ற உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ர.மணிமேகலை ஆகியோரும் களத் தில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடு பட்டனர். மாநகராட்சி வாகனத்தின் மூலம் அங்கு சுத்தம் செய்யப்பட்ட குப்பைகள் புதர்கள் ஆகியவை அகற்றி வெளியேற்றப்பட்டன. வாலி பர் சங்கத்தினரின் உழைப்பு தான சேவையில் ஈடுபட்ட இளைஞர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி னர்.