திருப்பூர், ஆக.17- 78 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன் னிட்டு வியாழனன்று இந்திய ஜனநாயக வாலி பர் சங்க கருமாரம்பாளையம் கிளை சார்பில் 12 ஆம் ஆண்டு மக்கள் ஒற்றுமை விளை யாட்டு விழா நடைபெற்றது. வாலிபர் சங்கம் கருமாரம்பாளையம் கிளைத் தலைவர் இ.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிளைச் செயலா ளர் எம்.சீனிவாசன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் எஸ்.மணிகண்டன் துவக்கி வைத்து பேசினார். மாநிலச் செயலாளர் ஏ.வி சிங்காரவேலன் சிறப்புரையாற்றினார். இதில், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அருள், வடக்கு மாநகரத் தலைவர் எஸ். கண்ணன், செயலாளர் விவேக், 34 ஆவது வார்டு கவுன்சிலர் பி.ஆர்.செந்தில்குமார், திமுக 33 வார்டு வட்டச் செயலாளர் ஸ்டார் மணி (எ)பொன்னுசாமி, இளைஞர் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.சந்தீப் உட்பட பலர் பங்கேற்றனர்.