districts

img

உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு

உதகை, ஜூன் 10- உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி உதகை ஒருங்கி ணைந்த நீதிமன்றத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 ஆம் தேதி கடைப்பிடிப் பதையொட்டி, வனத்துறை மற்றும் தன்னார்வலர்கள் சார் பில் மரக்கன்று நடுதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றது. உதகையை அடுத்த காக்காத்தோப்பு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று கள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி முருகன் தலைமை வகித்தார். மக்கள் நீதி மன்ற தலைவர் ஸ்ரீதரன், சார்பு நீதிபதி ஸ்ரீதர், குற்றவியல் நீதிபதி தமிழினியன், உரி மையியல் நீதிமன்ற நீதிபதி மோகனகிருஷ்ணன், வனச்சர கர் ரமேஷ், வானவர்கள் ஜாவித், நவரத்தினம், யோகேஸ் வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.