districts

img

தமிழ்நாட்டில் முதன்முறையாக மோப்ப நாய் பிரிவில் பெண் போலீசார்

கோவை, மே 24- தமிழகத்தில் முதல் முறையாக மோப்ப நாய்களுக்கு பெண் போலீசார் பயிற்சி அளித்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  கோவை மாநகர காவல் துறையில்  துப்பறியும் மோப்ப நாய் பிரிவு கடந்த  1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2001 ஆம் ஆண்டு  முதல் மோப்ப நாய்களுக்கு பயிற்சி  அளிக்கும் சிறப்பு மையம் தொடங்கப் பட்டு செயல்பட்டு வருகிறது. போதை பொருட்களை கண்டறிவதற்காக கோவைக்கு தற்போது புதிதாக பெல்ஜி யம் மெலானாய்டு வகையை சேர்ந்த மதனா என பெயரிடப்பட்ட 8 மாதம் ஆன மோப்ப நாய் சேர்க்கப்பட்டுள்ளது. கோவையில் இப்பிரிவில் 8 மோப்ப நாய் கள் உள்ளன.  இதுதவிர திண்டுக்கல், பாளையங் கோட்டை மத்திய சிறை உள்பட பல் வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக் கப்பட்டு வருகிறது. சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் அம்பலவாணன் தலைமையில் இந்த பிரிவு இயங்குகிறது. கோவை மாநகரில் கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் நடந்தால், அப்பகு திக்கு மோப்ப நாய் கொண்டு செல்லப் பட்டு, துப்பறியும் பணியை போலீசார் மேற்கொள்கிறார்கள். மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற் றும் வெடிகுண்டு கண்டறிதல் போன்ற  பணிகளிலும் மோப்ப நாய்கள் ஈடு படுத்தப்படுகின்றன. 

போலீஸ் மோப்ப நாய் பயிற்சி பிரி வில் கடந்த 2001 ஆம் ஆண்டில் இருந்து, ஆண் போலீசார் மட்டுமே மோப்ப நாய்க ளுக்கு பயிற்சி அளித்து வந்தனர். இந் நிலையில், தற்போது தமிழ்நாட்டி லேயே முதல் முறையாக கோவை மோப்ப நாய் பிரிவில் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய திருப்பூரை சேர்ந்த கவிப்பிரியா (வயது 25), தேனி பகுதி பவானி (26) ஆகிய 2 பெண் போலீ சார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர் கள் வில்மா என்கிற லேப்ரடார் வகை நாய், பெல்ஜியம் மெலானாய்டு நாய் உள்ளிட்ட மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள். இதுகுறித்து கவிப்பிரியா, பவானி ஆகியோர் கூறுகையில், நாங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந் தோம். ஏற்கனவே வீடுகளில் நாய்களை வளர்த்து வருகிறோம். இதனால் எங்க ளுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம் உண்டு. கோவையில் முக்கிய பிரமு கர்கள் வரும்போது மோப்ப நாய்களை  கொண்டு சோதனை செய்வதை பாது காப்புக்கு சென்ற இடத்தில் பார்த்து உள்ளோம். அப்போது நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மோப்ப நாய் பிரிவில் சேர வேண்டும் என்று எண்ணினோம். இதற்கிடையே தான் கோவை மாந கர காவல் ஆணையாளர்  பாலகிருஷ் ணன் போலீஸ் மோப்ப நாய் பிரிவில் சேர பெண் போலீசாரிடம் ஆர்வம் உள்ளதா?  என்று கேட்டிருந்தார். இதையடுத்து நாங் கள் எங்களின் ஆர்வத்தை கூறினோம். அதன்படி தற்போது மோப்ப நாய் பிரி வில் சேர்ந்து, நாய்களுக்கு அதிகாரி களின் சொல்லுக்கு கீழ்ப்படிதல், போதை பொருட்களை கண்டறிவது, கொலை, கொள்ளை சம்பவங்களில் துரத்திச் சென்று மோப்பம் பிடிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது, என்றார்.