திருப்பூர், ஆக.17- கலைஞர் மகளிர் உரிமை தொகை குறித்து வாட்ஸ் அப்பில் வதந்தி பரவியதால், திருப்பூர் மாவட் டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு பெண்கள் பலர் சனியன்று வந்திருந்தனர். மகளிர் உரிமை தொகையாக ரூ. 1000 வழங்கும் திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இதைதொடர்ந்து நவம்பர் மாதம் இரண்டாம் கட்டமாக விடுபட்ட பெண்களுக்கும், கடந்த மாதம் விண் ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பெண்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சனி, திங்கள், செவ்வாய் ஆகிய கிழமை களில் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், விடுபட்ட பெண்களி டம் விண்ணப்பங்கள் பெறப்படுவதா கவும், அவ்வாறு பெறப்படும் விண் ணப்பங்கள் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என போஸ் டர் ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு மாவட்ட நிர்வாகம் சார் பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டி ருந்தது. இருப்பினும், இதனை உண் மையென நம்பி திருப்பூர் மாவட்டத் திற்கு உட்பட்ட காங்கேயம், பெருமா நல்லூர், முதலிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராள மான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சனியன்று வந்தி ருந்தனர். இதுபோன்ற முகாம்கள் எதுவும் இன்று நடைபெறவில்லை என ஆட்சியர் அலுவலக அதிகா ரிகள் கூறியும், பெண்கள் தொடர்ந்து காத்திருந்தனர். இது போல தவறான தகவலை பரப்பி பொதுமக்களுக்கும், அரசு நிர் வாகத்திற்கும் இடையூறு ஏற்படுத்து பவர்களை கண்டறிந்து தக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தி ருந்த பெண்கள் சிலர் கூறினர்.