சமையல் கேஸ் விலை உயர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள் ளது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை யில்லை என்பது போல இந்த விலை உயர்வி னால் ஏற்பட்ட பாதிப்புகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதேசமயம், இந்த விலை உயர்வினால் என்ன மாதிரி யான பாதிப்பு ஏற்படுகிறது, எப்படி சமாளிக் கிறார்கள் என்று தெரிந்து கொள்ள பொங்க லூர் வட்டாரத்தில் இருக்கும் பெண்களி டம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: சுலோச்சனா: பத்து பதி னஞ்சு வரு ஷமா சிலிண்ட ரில் எரித்தேன் இப்ப எனக்கு 50 வயசு ஆச்சு. இருதய ஆப ரேஷன் பண்ணிருக் ண்ணிருக் கேன். ஆனா லும் வேற அடுப்புல தான் எரிக்கிறேன். 400 ரூபாய் இருக்கிறப்பகூட நான் சிலிண்டர் எடுத்துட்டு இருந்தேன் என் பையனை கஷ் டப்படுத்த கூடாது, அவன் குடும்பத்தை யும் பார்க்கிறான். அதனால சிலிண்டர் எடுக்க முடியல, உடம்பு சரி இல்லாம இருக் கிற சூழலில் கூட நான் அடுப்பில் சமைச்சு சாப்பிடுறேன் என கண்ணீர் மல்க கூறினார்.
அஃரின்:
நூறு நாள் வேலைக்கு போகிறேன். குழந்தைகளை வைத்து விட்டு வேற வேலைக்கு போக முடியல, நூறுநாள் வேலையிலும் சம்பளம் தருவதில்லை. சிலிண்டர் இந்த மாத கணக்கில் எடுக்க முடிவதில்லை. குழு வில்கூட கடன் வாங்குவது சிலிண்டர் எடுக்க பயன்படுத்துகிறோம். பழைய காலம் போல இன்னைக்கு விறகு அடுப்புல இருக்கிற நிலைமை எங்களுக்கெல்லாம் வந்து இருக்கு என்றார்.
சிவகாமி:
கம்பெனி வேலைக்கு தான் போயிட்டு இருக் கோம். இப்ப வேலை கம்மியா இருக்கு, வருமா னமும் கம்மியா இருக்கு. இப்படி சிலிண்டர் விலை அதிகம் பண்ணிட்டே போனா, சிலிண்டர் இல்லாம நாங்க என்ன பண்ண முடியும்? அக்கவுண்ட்ல பணம் வரும்னு சொன் னாங்க, அதுவும் வர்றதில்ல. சிலிண்டர் தீர்ந்து அதை எடுப்பதற்கு ரொம்ப கஷ்டப் படுகிறோம். இப்படியே விலையுயர்ந்து போனா நாங்க எல்லாம் எப்படி வாழற துன்னு தெரியல என்றார்.
லட்சுமி
கூலி வேலைக்கு போறோம், சிலிண் டர் தீர்ந்த பிறகும் ஒரு மாசம் வரைக் கும் எடுக்க முடிய வில்லை. கந்து வட்டிக்கு வாங்கி சிலிண்டர் எடுக்கிறோம். நூற்றுக்கு பத்து ரூபாய் கந்துவட்டி, மறுபடியும் சிலிண்டர் அதுக்குள்ள வட்டி, கடன்கூட அடைக்க முடியல. பேங்க்ல பணம் போடுறோம்னு சொன்னாங்க. ஒரு ரூபாய் கூட எங்க அக்கவுண்ட் வரவே இல்ல என்றார்.
பாப்பம்மாள்:
சிலிண்டர் இப்படி விலை ஏறுச்சுன்னா நாங் கள் வயசான வங்க என்ன பண் றது? விறகு அடுப்பையும் எரிக்க முடியவில்லை, சீமெண்ணெய் (மண் ணென்னை) இப்ப ரேஷனலே கிடைக்கி றதில்ல. மேல ஆட்சியில் இருக்கிறவங்க ஏன் சாமி இப்படி பண்றாங்க? எங்க வயித்தெ ரிச்சல கூட்டிட்டு அவங்க எல்லாம் நல்லா இருக்காங்களா என்றார்.
மேனகா:
சிலிண்டர் விலை உயர்த்தி ருவாங்க, சம்ப ளத்தை உயர்த்த தெரியல! மோடி புண்ணியத்தில் விறகு அடுப்பு எரிக்கிறோம் என் றார். இந்தப் பகுதி முழுவதும் விறகுகள் கிடைக்கும் இடத்தில் விறகு அடுப்பும், மற்ற பலர் மண்ணெண்ணெய் அடுப்பும் வைத்து சமைக்கும் நிலை உள்ளது. வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு மிகவும் கஷ்டம். விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு வைக்க முடியாது. சிலிண்டர் விலை உயர்வையும் சமாளிக்க முடியாமல், வேறு விறகு, மண்ணெண்ணெய் அடுப்புக்கும் மாற முடியாமல் கடும் நெருக்கடியில் சிக்கி மக்கள் மோடி அரசு மீது மிகவும் கோபத் தில் உள்ளனர்.